மூலப்பொருட்களின் விலை உயர்வால் நலிவடைந்து வரும் பாய் முடையும் தொழில்மூலப்பொருட்களின் விலை உயர்வால் நலிவடைந்து வரும் பாய் முடையும் தொழில் ... சணல் உற்பத்தி 12 சதவீதம் குறையும்: சணல் உற்பத்தி 12 சதவீதம் குறையும்: ...
"கிரெடிட் கார்டு' வாயிலாகரூ.96,614 கோடி பரிவர்த்தனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2012
00:08

புதுடில்லி:சென்ற 2011-12ம் நிதியாண்டில், "கிரெடிட் கார்டு' வாயிலாக, 96,614 கோடி ரூபாய்க்கு, பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு, ஒரு "கிரெடிட் கார்டு' மூலம், சராசரியாக, 55 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. இது, "டெபிட் கார்டு' வாயிலான செலவை விட, 30 மடங்கு அதிகமாகும். அதே சமயம், "கிரெடிட் கார்டு' புழக்கத்தை விட, 15 மடங்கு அதிகமாக"டெபிட் கார்டு' புழக்கத்தில் உள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாடு தழுவிய அளவில், 1.76 கோடி "கிரெடிட் கார்டுகள்' புழக்கத்தில் இருந்தன. இது, நடப்பு 2012-13ம் நிதியாண்டில், சென்ற ஜூன் மாத நிலவரப்படி, 1.80 கோடியாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், "டெபிட் கார்டு' எண்ணிக்கை, 27.80 கோடியிலிருந்து, 29 கோடியாக உயர்ந்துள்ளது.
சென்ற நிதியாண்டில், "கிரெடிட் கார்டு' வாயிலாக, 96,614 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. சராசரியாக ஒரு "கார்டு' வாயிலான பரிவர்த்தனை மதிப்பு, 54,738 ரூபாய் என்ற அளவில் உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், "டெபிட் கார்டு' வாயிலான பரிவர்த்தனை மதிப்பு, 53,432 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சராசரியாக, ஒரு "டெபிட் கார்டு' மூலம், 1,920 ரூபாய்க்கு பரிவர்த்தனை நடந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 1.80 கோடி "கிரெடிட் கார்டு' வாயிலாக, 28,465 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடந்துள்ளது. இக்காலாண்டில், சராசரியாக, ஒரு "கிரெடிட் கார்டு' வாயிலான செலவு, 15,805 ரூபாய் என்ற அளவிலும், "டெபிட் கார்டு' வாயிலான செலவு, 528 ரூபாய் என்ற அளவிலும் இருந்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)