பதிவு செய்த நாள்
10 செப்2012
00:08
புதுடில்லி:சென்ற 2011-12ம் நிதியாண்டில், "கிரெடிட் கார்டு' வாயிலாக, 96,614 கோடி ரூபாய்க்கு, பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு, ஒரு "கிரெடிட் கார்டு' மூலம், சராசரியாக, 55 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. இது, "டெபிட் கார்டு' வாயிலான செலவை விட, 30 மடங்கு அதிகமாகும்.
அதே சமயம், "கிரெடிட் கார்டு' புழக்கத்தை விட, 15 மடங்கு அதிகமாக"டெபிட் கார்டு' புழக்கத்தில் உள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாடு தழுவிய அளவில், 1.76 கோடி "கிரெடிட் கார்டுகள்' புழக்கத்தில் இருந்தன. இது, நடப்பு 2012-13ம் நிதியாண்டில், சென்ற ஜூன் மாத நிலவரப்படி, 1.80 கோடியாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், "டெபிட் கார்டு' எண்ணிக்கை, 27.80 கோடியிலிருந்து, 29 கோடியாக உயர்ந்துள்ளது.
சென்ற நிதியாண்டில், "கிரெடிட் கார்டு' வாயிலாக, 96,614 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. சராசரியாக ஒரு "கார்டு' வாயிலான பரிவர்த்தனை மதிப்பு, 54,738 ரூபாய் என்ற அளவில் உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், "டெபிட் கார்டு' வாயிலான பரிவர்த்தனை மதிப்பு, 53,432 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சராசரியாக, ஒரு "டெபிட் கார்டு' மூலம், 1,920 ரூபாய்க்கு பரிவர்த்தனை நடந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 1.80 கோடி "கிரெடிட் கார்டு' வாயிலாக, 28,465 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடந்துள்ளது. இக்காலாண்டில், சராசரியாக, ஒரு "கிரெடிட் கார்டு' வாயிலான செலவு, 15,805 ரூபாய் என்ற அளவிலும், "டெபிட் கார்டு' வாயிலான செலவு, 528 ரூபாய் என்ற அளவிலும் இருந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|