பதிவு செய்த நாள்
10 செப்2012
00:18
தாராபுரம்;தாராபுரம் வட்டாரத்தில் உற்பத்தி செய்யப்படும் தரமான செங்கல்களுக்கு கேரளாவில் வரவேற்பு அதிகரித்துள்ளது.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, தாராபுரம், ஆச்சியூர், வீராட்சிமங்கலம், மதுக்கம்பாளையம், திருமலையம்பாளையம், தளவாய்பட்டணம், நஞ்சியம்பாளையம், அலங்கியம் உட்பட, 20க்கு மேற்பட்ட கிராமங்களில், செங்கல் உற்பத்தி முக்கிய தொழிலாக விளங்குகிறது.
தாராபுரத்தில், 200க்கும் மேற்பட்ட கைச்சூளைகளும், 50க்கும் மேற்பட்ட "சேம்பர்' சூளை நிறுவனங்களும், பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. செங்கல் உற்பத்தியில்,தென் மாவட்டங்களைச் சேர்ந்த, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள், குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.தாராபுரத்தில் உற்பத்தி செய்யப்படும் செங்கல், பல்லடம், திருப்பூர், திண்டுக்கல், பொள்ளாச்சி, உடுமலை விருதுநகர், சிவகாசி, தஞ்சாவூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் விற்கப்படுகிறது.
தஞ்சாவூர், திருச்சி, கரூர், விருதுநகர், சிவகாசி உட்பட தென் மாவட்டங்களுக்கு நெல், விறகு ஆகியவற்றை லாரிகள் மூலம் எடுக்கச் செல்லும் வியாபாரிகள், போகும்போது தாராபுரம் செங்கல்களை எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றனர்.தமிழகம் முழுவதும் குடியிருப்புகளின் எண்ணிக்கை, வணிக வளாகங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், செங்கலுக்கான தேவையும் உயர்ந்து வருகிறது.
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக செங்கல் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேற்கு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவுக்கும் அதிகளவில் செங்கல் அனுப்பப்படுகிறது. ஒரு செங்கல், ஏழு முதல், ஒன்பது ரூபாய் வரை விற்கப்படுகிறது. செங்கல்களுக்கு தேவை அதிகரித்துள்ளதால், அதன் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|