தொலைதொடர்பு சந்தாதாரர்கள் 2 கோடி குறைவுதொலைதொடர்பு சந்தாதாரர்கள் 2 கோடி குறைவு ... ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.70,548 கோடி ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.70,548 கோடி ...
துவரை, உளுத்தம் பருப்பு வகைகள் விலை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2012
00:21

சேலம்:வடமாநிலங்களில், பருப்பு அறுவடை துவங்கியுள்ளதால், தமிழகத்துக்கு துவரை, உளுந்து, துவரம் பருப்பு வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அவற்றின் விலை குறைந்து உள்ளது.விளைச்சல்:கடந்த ஆண்டு பருப்பு விலை, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. இதனால் ஊக்கமடைந்த, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், அதிக அளவில் பருப்பு வகைகளை பயிரிட்டனர். இதன் காரணமாக, நடப்பாண்டு பருப்பு வகைகளின் விளைச்சல், 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் பயறு, அறுவடை துவங்கியுள்ளது. இத்துடன், பண்டிகை காலமும் துவங்கி உள்ளதால், வடமாநில வியாபாரிகள், தாங்கள் இருப்பு வைத்திருந்த துவரை, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளை மிக வேகமாக விற்பனை செய்து வருகின்றனர்.இதனால், தமிழகத்துக்கு, பருப்பு வகைகளின் வரத்து அதிகரித்து, அதன் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம், 7,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு குவிண்டால் உளுத்தம் பருப்பு, தற்போது, 200 ரூபாய் குறைந்து, 7,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தமிழக ஆலைகள்:அது போன்று ஒரு குவிண்டால் முதல் ரக துவரம் பருப்பு விலை, 8,400லிருந்து 8,200 ரூபாயாக குறைந்துஉள்ளது. இரண்டாம் ரகம்
8,050லிருந்து 7,800 ரூபாயாகவும், மூன்றாம் ரகம் 7,700லிருந்து 7,500 ரூபாயாகவும் சரிந்துள்ளது.வடமாநிலங்களில் இருந்து, குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் இருந்து தமிழக ஆலைகளுக்கு, மிக அதிக அளவில் பருப்பு வகைகள் விற்பனைக்கு வருகின்றன. இது, மேலும் அதிகரிக்கும் என்ற தகவலால், பருப்பு வகைகளை இருப்பு வைத்துள்ள வியாபாரிகள் மத்தியில், கிலி ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா:செவ்வாய்ப்பேட்டை பருப்பு வியாபாரி சக்கரவர்த்தி கூறியதாவது:தமிழகத்துக்கு தேவையான பருப்பு வகைகள், கர்நாடகாவின், தாவன்கரே, மகாராஷ்டிராவின், குல்பர்கா ஆகிய இடங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. நடப்பாண்டு, வடமாநிலங்கள் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் பருப்பு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், வரும் நாட்களில் பருப்பு விலை மேலும் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)