பருவமழை குறித்த மதிப்பீடு மாறியதால்...வேளாண் முன்பேர சந்தைகளில் சுணக்க நிலைபருவமழை குறித்த மதிப்பீடு மாறியதால்...வேளாண் முன்பேர சந்தைகளில் சுணக்க ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ...
ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி பெறும்: ஏற்றுமதியாளர் சங்கம் நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2012
12:40

திருப்பூர்: ""தொழில் துறையினரின் கூட்டு முயற்சியாலும், மத்திய, மாநில அரசுகளின் உதவியாலும், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி அடையும்,'' என ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க 22வது பொதுக்குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். அப்போது, சங்கத்தின் ஓராண்டு நடவடிக்கைகள் மற்றும் தொழில் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது.
சக்திவேல் பேசியதாவது: அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையாலும், நூல் விலை உயர்வு, சாயத்தொழில் பிரச்னை, மின்வெட்டு உள்ளிட்ட உள்நாட்டு பிரச்னைகளாலும் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. வங்கி கடன் மீதான வட்டி, கடந்த ஆண்டில் 13 முறை உயர்த்தப்பட்டது. கடந்த 2011-12ம் ஆண்டில், இந்தியா 1.52 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்திருந்தது. கடந்த சில ஆண்டுகளாக, திருப்பூரில் இருந்து 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடந்து வருகிறது. தமிழக அரசின் பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், "விஷன் 2023' திட்டத்தால், எண்ணற்ற வசதி வாய்ப்புகள் தொழில் துறைக்கு கிடைக்கும். 2012-16ம் ஆண்டு வரை தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மூடிக்கிடந்த சாய ஆலைகளும், சுத்திகரிப்பு நிலையங்களும், படிப்படியாக இயங்கத் துவங்கியுள்ளன.
தமிழக அரசு சார்பில், சிறு, குறு தொழில்துறையினர் பயனடையும் வகையில், மூன்று சதவீத வட்டியில் தொழில் முதலீட்டு கடன் வழங்க முதல்வர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. சங்க முயற்சியால், "டப்' திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. "டப்' திட்டம் நிறுத்தியிருந்த காலத்தில் நடந்த பரிவர்த்தனைகளை திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுடனான, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறும்போது, வர்த்தகம் பன் மடங்கு உயரும். அதற்கான ஆயத்த பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஏ.இ.பி.சி.,யுடன் இணைந்து, ஏற்றுமதியாளர்கள் பயனடையும் வகையில், கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொழில் துறையினரின் கூட்டு முயற்சியாலும், மத்திய, மாநில அரசுகளின் உதவியாலும், வருங்காலங்களில் திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி அடையும், என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)