பதிவு செய்த நாள்
12 செப்2012
13:37
ஜப்பானை சேர்ந்த, ஹோண்டா கார் நிறுவனம், இந்தியாவில், ஸ்ரீராம் குழுமத்தை சேர்ந்த," உஷா இன்டர்நேஷனல்' என்ற நிறுவனத்துடன் இணைந்து, 1995ம் ஆண்டு, "ஹோண்டா சியல் கார்ஸ் இந்திய லிமிடெட்' என்ற நிறுவனத்தை துவக்கியது. ஹோண்டா சிட்டி, அக்கார்டு, பிரியோ, ஜாஸ் உள்ளிட்ட மாடல் கார்களை, இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்த நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. உஷா இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் இருந்த, 3.16 சதவீத பங்குகளை, ரூ.180 கோடிக்கு, ஹோண்டா நிறுவனமே வாங்கியுள்ளது.இதன் பிறகு, இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனத்தின் அடையாளம் மாற்றப்படுகிறது என்று, ஹோண்டா சியல் கார்ஸ் இந்தியா நிறுவன துணை தலைவரும், இயக்குனருமான ராமன் குமார் சர்மா தெரிவித்துள்ளார். பெயர் மாற்றத்துக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், இந்த மாத இறுதியில், இது செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஹோண்டா கார் நிறுவனத்தின் பெயரில் உள்ள,"சியல்' என்ற வார்த்தை மட்டும் நீக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தவிர வேறு எந்த அடிப்படை மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் ராமன் குமார் சர்மா தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்துக்கு, உ.பி.,யின் கிரேட்டர் நொய்டா பகுதியில் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஆண்டுக்கு, 1.2 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|