பதிவு செய்த நாள்
12 செப்2012
23:59
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் ஆறாவது நாளாக, புதன்கிழமையன்றும் சிறப்பாக இருந்தது.அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள், பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற நிலைப்பாட்டால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது.
ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட நிதியம், நிபந்தனைகளுடன் செயல்பட ஜெர்மன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் வர்த்தகத்திலும் விறுவிறுப்பு ஏற்பட்டது.சென்ற ஜூலை மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, மிகவும் பின்னடைந்துஉள்ளது என்ற செய்தியால், பங்கு வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உலக நிலவரங்க ளால்,உள்நாட்டு பங்குச் சந்தைகளில் பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், மோட்டார் வாகனம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை இருந்தது.சென்ற பிப்ரவரி மாதத்திற்கு பிறகு, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் மீண்டும் 18,000 புள்ளிகளை தாண்டியது. நேற்றைய வர்த்தகத்தில் மட்டும், 147.08 புள்ளிகள் அதிகரித்து, 18,000.03 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 18,012.89 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,884.96 புள்ளிகள் வரையிலும் சென்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 41 புள்ளிகள் உயர்ந்து, 5,431 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|