தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... அலைபேசி எண்ணை மாற்றாமல்... நிறுவனங்களை மாற்றியோர் எண்ணிக்கை 32 கோடி அலைபேசி எண்ணை மாற்றாமல்... நிறுவனங்களை மாற்றியோர் எண்ணிக்கை 32 கோடி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
"சென்செக்ஸ்' மீண்டும் 18,000 புள்ளிகளை தாண்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2012
23:59

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் ஆறாவது நாளாக, புதன்கிழமையன்றும் சிறப்பாக இருந்தது.அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள், பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற நிலைப்பாட்டால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது.
ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட நிதியம், நிபந்தனைகளுடன் செயல்பட ஜெர்மன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் வர்த்தகத்திலும் விறுவிறுப்பு ஏற்பட்டது.சென்ற ஜூலை மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, மிகவும் பின்னடைந்துஉள்ளது என்ற செய்தியால், பங்கு வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உலக நிலவரங்க ளால்,உள்நாட்டு பங்குச் சந்தைகளில் பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், மோட்டார் வாகனம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை இருந்தது.சென்ற பிப்ரவரி மாதத்திற்கு பிறகு, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் மீண்டும் 18,000 புள்ளிகளை தாண்டியது. நேற்றைய வர்த்தகத்தில் மட்டும், 147.08 புள்ளிகள் அதிகரித்து, 18,000.03 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 18,012.89 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,884.96 புள்ளிகள் வரையிலும் சென்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 41 புள்ளிகள் உயர்ந்து, 5,431 புள்ளிகளில் நிலைபெற்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)