ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி 40 சதவீதம் சரிவுஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி 40 சதவீதம் சரிவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு ...
சலுகை விலையில் துவரம் பருப்பு, பாமாயில் : ரேஷன் கடைகளில் வினியோகிக்க அரசு முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2012
12:49

சென்னை : ரேஷன் கடைகளில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை, அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை, மானிய விலையில் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, வெளியான அரசு அறிக்கையில் உள்ள தகவல்: அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம், மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை சார்ந்துள்ளது. விலையேற்றம் தமிழக மக்களை பாதிக்காத வகையில், விலைவாசியை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதற்காக, 50 கோடி ரூபாய் நிதி இருப்புடன் கூடிய, விலைக் கட்டுப்பாட்டு நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம், சமீபத்தில் நடந்த போது, விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில், விலைக் கட்டுப்பாட்டு நிதியத்தை பயன்படுத்தி, நெல் விளைச்சல் அதிகமாக உள்ள மேற்கு வங்கத்தில் இருந்து, தமிழகத்தின் பொன்னி அரிசிக்கு இணையான அரிசி வகைகளை கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இந்த அரிசி, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமுதம் மற்றும் கூட்டுறவு கடைகள் மூலம் வினியோகிக்கப்படும். ஒரு கிலோ அரிசி, 25 ரூபாய்க்கும், மற்ற ரக அரிசி, 31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. சராசரியாக, மாதம் ஒன்றிற்கு, 14 ஆயிரம் டன் துவரம் பருப்பில், 2,000 டன் பருப்பை, கிலோ ஒன்றிற்கு, 55 ரூபாய் என, சிறிதளவு மானிய விலையில், மத்திய அரசு வழங்கி வந்தது. இது, இங்கு கிலோ ஒன்றிற்கு, 30 ரூபாய் என்ற அளவில் வழங்கப்படுகிறது. ஆனாலும், இம் மானியத்தை கடந்த ஜூன் மாதத்துடன் மத்திய அரசு நிறுத்தி விட்டது.
இது தவிர, மத்திய மானியம் இல்லாத உளுத்தம் பருப்பும், கிலோ, 30 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. பாமாயில் ஒரு லிட்டர், சந்தை விலை, 66.30 ரூபாய். அதை, 52.65 ரூபாய் என்ற விலையில், மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு வழங்கி வருகிறது. இது தற்போது, லிட்டர் ஒன்றிற்கு, 25 ரூபாய் என்ற விலையில், ரேஷன் கடையில் விற்கப்படுகிறது. ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை, அக்., 1ம் தேதி முதல், அடுத்தாண்டு, மார்ச் 31ம் தேதி வரை, மேலும் ஆறு மாதங்களுக்கு வழங்கஉத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு, 907 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். அதே சமயம், வெளிச்சந்தையில் அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை, கட்டுப்பாட்டில் இருக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)