பதிவு செய்த நாள்
13 செப்2012
23:54
புதுடில்லி:நடப்பு 2012ம் ஆண்டின், முதல் ஏழு மாத காலத்தில் (ஜன.,-ஜூலை), நாட்டின் தேயிலை உற்பத்தி, 4 சதவீதம் குறைந்து,4.71 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில்,4.92 கோடி கிலோவாக அதிகரித்து காணப்பட்டது.
தென் மாநிலங்கள்:மதிப்பீட்டு காலத்தில், நாட்டின் வடமாநிலங்களில், தேயிலை உற்பத்தி 4 சதவீதம் குறைந்து, 3.48 கோடி கிலோவிலிருந்து,3.33 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது.இதேபோன்று, தென்மாநிலங்களில் இதன் உற்பத்தி 4 சதவீதம் சரிவைக் கண்டு, 1.44 கோடி கிலோ என்ற அளவிலிருந்து, 1.38 கோடி கிலோவாக வீழ்ச்சி கண்டுள்ளது.
சென்ற ஜூலை மாதத்தில் மட்டும், நாட்டின் தேயிலை உற்பத்தி, 1.33 கோடி கிலோவிலிருந்து, 1.32 கோடி கிலோ வாக சற்று குறைந்துள்ளது.மேலும் வட மாநிலங்களில் இதன் உற்பத்தி, 1.12 கோடி கிலோ என்ற அளவிலிருந்து, 1.10 கோடி கிலோவாக குறைந்துள்ளது. அதேசமயம், தென்னிந்தியாவில் இதன் உற்பத்தி, 21.30 லட்சம் கிலோ விலிருந்து, 22.70 லட்சம் கிலோவாக வளர்ச்சி கண்டுள்ளது.
பயன்பாடு:ஐ.சி.ஆர்.ஏ., என்ற மேலாண்மை ஆலோசனை நிறுவனம், நடப்பாண்டில், உள்நாட்டில் தேயிலை உற்பத்தி,95 கோடி கிலோவாக குறையும் என,மதிப்பீடு செய்துள்ளது.சென்ற 2011ம்ஆண்டில், நாட்டின் தேயிலை உற்பத்தி 98.83 கோடி கிலோ என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.இந்தியா,தேயிலை உற்பத்தி யில் இரண்டாவது மிகப் பெரிய நாடாக விளங்குகிறது. மேலும், தேனீர் பயன்பாட்டிலும் முன்னிலையில் உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|