சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி ரூ.2.09 லட்சம் கோடிசென்ற ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி ரூ.2.09 லட்சம் கோடி ... டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு: காஸ் சிலிண்டருக்கு வந்தது கட்டுப்பாடு டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு: காஸ் சிலிண்டருக்கு வந்தது கட்டுப்பாடு ...
பண்டிகை காலத்தையொட்டி... இணையதளத்தின் மூலம் பொருட்கள் விற்பனை தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2012
23:56

ஆமதாபாத்:பண்டிகை காலத்தை முன்னிட்டு, இணையதளம் வாயிலாக பொருட்களை வாங்குவது அதிகரித்து வருவதால், இச்சந்தை, 350 சதவீதம் வளர்ச்சி காணும் என, "அசோசெம்' அமைப்பு மதிப்பிட்டுள்ளது.தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, மொபைல் போன், கம்ப்யூட்டர், லேப்-டாப், டேப்லெட் கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களால், இணைய தள பயன்பாடு அதிகரித்துள்ளது.
விலை குறைவு:மக்கள், தாங்கள் விரும்பும் பொருட்களை, இணையதளம் வழியாக, "கிரெடிட்' மற்றும் "டெபிட்' அட்டைகளை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே வாங்க முடிகிறது.குண்டூசி முதல் குக்கர் வரை,வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும், இணையதளத்தின் மூலம் வாங்கும் வசதி உள்ளதால், இல்லத்தர சிகளிடையே, இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இ-பே இந்தியா, ஜங்லீ டாட் காம், ஜபாங் டாட் காம், மிந்த்ரா டாட் காம் என, நூற்றுக் கணக்கான நிறுவனங்கள், இணையதளத்தில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.பாரம்பரிய கடைகளை விட, இணைய தளத்தில் பல பொருட்களின் விலை குறைவாக உள்ளது. இதனால், கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கு வோரின் பார்வை, தற்போது, இணையதள கடைகளின் பக்கம் திரும்பி வருகிறது. நேரம், அலைச்சல், செலவு மிச்சம் என்பதால், இணையதள வர்த்தகச் சந்தையை நாடுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
தள்ளுபடி:ஆசிய பசிபிக் நாடுகளை பொறுத்தவரை,இந்தியாவில் இணையதளம் வாயிலாக பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கை, குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்து வருகிறது. இணையதளத்தில்,நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் பல நிறுவனங்கள், சென்ற ஆண்டு தீபாவளிக்கு, 10-15 சதவீதம் முதல், 80-90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கியதுடன், பரிசு கூப்பன், இலவச வினியோகம், பரிசுப் பொருட்கள் உள்ளிட் டவற்றை வழங்கின.
இதுபோன்ற காரணங்களால், சென்ற 2011ம் ஆண்டில், 1.25 கோடி வாடிக்கையாளர்கள், இணையதளம் வாயி லாக, 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்முதல் செய்துள்ளதாக, மதிப்பிடப்பட்டுள்ளது. தற் போது, இந்தியாவில்,இணையதள வர்த்தக சந்தையின் மதிப்பு,6,000 கோடி ரூபாய் என,மதிப்பிடப் பட்டுள்ளது.
தீபாவளி:இச்சந்தை மதிப்பு, ஆண்டுக்கு250 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. நாடு தழுவிய அளவில், 12 கோடிக்கும் அதிகமானோர், இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். இதில், பாதிக்கும் மேற்பட் டோர், இணையம் மூலம் பொருட்களை கொள்முதல் செய்கின்றனர்.
சென்ற ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, இணையதளம் மூலம் பொருட்களை வாங்கியோரில், வெளி நாடு வாழ் இந்தியரின் பங்களிப்பு, 40-50 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, வரும் தீபாவளிக்கு, 85 சத வீதமாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
வளர்ச்சி:நடப்பாண்டிலும், பண்டிகை காலம் துவங்குவதை முன்னிட்டு, பல நிறுவனங்கள், இணையதளம் வாயி லாக, தங்கள் பொருட்களை வாங்குவோருக்கு, பல்வேறு சலுகைகளை வழங்க உள்ளன. இதையடுத்து, பண்டிகை காலத்தில், இணைய வணிக சந்தை, 350 சதவீதம் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இணையதள வர்த்தகம் நன்கு வளர்ச்சி கண்டு வருவதையடுத்து, நடப்பு 2012ம் ஆண்டில், இதன் சந்தை மதிப்பு, 160 கோடி டாலராகவும், 2016ம் ஆண்டில், 880 கோடி டாலராகவும் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)