பண்டிகை காலத்தையொட்டி... இணையதளத்தின் மூலம் பொருட்கள் விற்பனை தீவிரம்பண்டிகை காலத்தையொட்டி... இணையதளத்தின் மூலம் பொருட்கள் விற்பனை தீவிரம் ... ரயில்வே வருவாய் 20 சதவீதம் அதிகரிப்பு ரயில்வே வருவாய் 20 சதவீதம் அதிகரிப்பு ...
டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு: காஸ் சிலிண்டருக்கு வந்தது கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2012
10:19

புதுடில்லி: டீசல் விலை, லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் விலை உயர்த்தப்படவில்லை. இனிமேல், ஒரு வீட்டுக்கு, ஆறு சமையல் காஸ் சிலிண்டர் மட்டுமே, ஆண்டு ஒன்றுக்கு மானிய விலையில் கிடைக்கும். அரசியல் விவகாரத்துக்கான கேபினட் கமிட்டி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று கூடியது. அப்போது, டீசல் விலையை லிட்டருக்கு, ஐந்து ரூபாய் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், மண்ணெண்ணெய், சமையல் காஸ் விலை உயர்த்தப்படவில்லை. மேலும், மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் சமையல் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஒரு குடும்பத்திற்கு, ஆண்டு ஒன்றுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானியவிலையில் சப்ளை செய்யப் படும். கூடுதல் சிலிண்டர்கள் தேவைப்படுவோர், சிலிண்டர் ஒன்றுக்கு, தலா 300 ரூபாய் வரை அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும். பெட்ரோல் விலை மீதான கலால் வரியை, லிட்டருக்கு ரூ.5.50 குறைக்க, கேபினட் கமிட்டி ஒப்புக் கொண்டது. இதனால், பெட்ரோல் விலை இப்போதைக்கு உயர்த்தப்படவில்லை இதையடுத்து, டீசல் விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல், அமலுக்கு வந்தது. சென்னையில் டீசல் விலை, லிட்டர் ரூ.48.91 ஆக விற்கப்பட்டது. டீசல் விலை உயர்வுக்கு ஐ.மு., கூட்டணியில் உள்ள திரிணமுல் காங்., உட்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. டீசல் விலை உயர்வால், லாரிகளின் வாடகைக் கட்டணம் உயரும் என, லாரி உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)