பதிவு செய்த நாள்
16 செப்2012
00:55
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, செப்., 7ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 158 கோடி டாலர் (8,690 கோடி ரூபாய்) அதிகரித்து, 29,204 கோடி டாலராக (16,06,220 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.இது, ஆகஸ்ட் 31ம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில், 28 கோடி டாலர் அதிகரித்து, 29,046 கோடி டாலர் (15,97,530 கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது என, ரிசர்வ் வங்கி, வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 108 கோடி டாலர் (5,940 கோடி ரூபாய்) என்ற அளவில் மிகவும் அதிகரித்துஉள்ளது. இதன் காரணமாகவே, அன்னியச் செலாவணி கையிருப்பு கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளது.மேலும், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் எவ்வித மாற்றமுமின்றி, 2,623 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது. சென்ற மார்ச் மாத இறுதியிலிருந்து, இதுவரையிலுமாக, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 235 கோடி டாலர் (12,925 கோடி ரூபாய்) குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|