கோழி தீவனம் விலை கிடு கிடு உயர்வுகோழி தீவனம் விலை கிடு கிடு உயர்வு ... ஆகஸ்ட் வரையிலான 10 மாத காலத்தில்...தாவர எண்ணெய் இறக்குமதி 19 சதவீதம் அதிகரிப்பு ஆகஸ்ட் வரையிலான 10 மாத காலத்தில்...தாவர எண்ணெய் இறக்குமதி 19 சதவீதம் ... ...
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...நிறுவனங்களின் முன் கூட்டிய வரியில் முன்னேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2012
01:08

மும்பை:நடப்பு 2012-13ம் நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி அதிகரித்துள்ளது. இந்திய நிறுவனங்கள், ஒரு நிதியாண்டிற்கு, நான்கு தவணைகளில், முன்கூட்டிய வரியை செலுத்துகின்றன.இவ்வகையில், நடப்பு நிதியாண்டின், செப்டம்பர் 15ம் தேதிக்குள் (இரண்டாவது தவணை), நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட அதிகரித்துள்ளது.
பெரும்பான்மையான நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி குறித்த தகவல்கள் வெளிவராத நிலையில், குறிப்பிட்ட சில நிறுவனங்கள் செலுத்திய வரி நல்ல அளவில் உயர்ந்துள்ளது.'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம்' என்பது போல, இதுவரை முன்கூட்டிய வரி செலுத்தியுள்ள நிறுவனங்களுள், எல்.ஐ.சி., நிறுவனம், இரண்டாவது காலாண்டில், செலுத்தியுள்ள முன்கூட்டிய வரி, 1,300 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், 1,165 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலாண்டுகளில், எச்.டீ.எப்.சி. பேங்க் செலுத்திய முன்கூட்டிய வரி, 2.38 சதவீதம் அதிகரித்து, 800 கோடி ரூபாயிலிருந்து, 1,100 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் செலுத்திய முன்கூட்டிய வரி, 4.97 சதவீதம் வளர்ச்சிகண்டு, 650 கோடி
ரூபாயிலிருந்து, 815 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.பொதுத் துறையை சேர்ந்த பேங்க் ஆப் பரோடா செலுத்திய வரி, 600 கோடி ரூபாயிலிருந்து, 620 கோடி ரூபாயாகவும், தேனா பேங்க் செலுத்திய வரி, 77 கோடி ரூபாயிலிருந்து, 180 கோடி ரூபாயாகவும் அதிகரித்துஉள்ளன. வெளிநாட்டு வங்கியான சிட்டி பேங்க் செலுத்திய வரி, 100 கோடி ரூபாயிலிருந்து, 400 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நுகர்பொருள் துறையில், முன்னணியில் உள்ள இந்துஸ்தான் யூனிலீவர் செலுத்திய வரி, 190 கோடி ரூபாயிலிருந்து, 300 கோடி ரூபாயாகவும், அம்புஜா சிமென்ட்ஸ் செலுத்திய வரி, 95 கோடியிலிருந்து, 160 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.
மோட்டார் வாகனத் துறையை சேர்ந்த மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், செலுத்திய முன்கூட்டிய வரி, 176 கோடி ரூபாயிலிருந்து, 200 கோடி ரூபாயாக வளர்ச்சிகண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு நிறுவனம், செலுத்தும் முன்கூட்டிய வரியை வைத்து, அக்காலாண்டில், அந்நிறுவனத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். அதாவது, குறிப்பிட்ட காலாண்டில், ஒரு நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி அதிகரித்திருக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் வருவாயும், லாபமும் நல்ல அளவில் உயர்ந்திருக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)