ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...நிறுவனங்களின் முன் கூட்டிய வரியில் முன்னேற்றம்ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...நிறுவனங்களின் முன் கூட்டிய வரியில் ... ... டீசல் விலை உயர்வால் நிதி பற்றாக்குறை குறையும் டீசல் விலை உயர்வால் நிதி பற்றாக்குறை குறையும் ...
ஆகஸ்ட் வரையிலான 10 மாத காலத்தில்...தாவர எண்ணெய் இறக்குமதி 19 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2012
01:15

புதுடில்லி:நடப்பு 2011-12ம் எண்ணெய் பருவத்தில் (நவம்பர் - அக்டோபர்), நவம்பர் முதல் ஆகஸ்ட் வரையிலான 10 மாத காலத்தில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி 19 சதவீதம் அதிகரித்து, 81.63 லட்சம் டன்னாக உயர்ந்துஉள்ளது. இது, கடந்த 2010-11ம் எண்ணெய் பருவத்தில், 68.61 லட்சம் டன்னாக இருந்தது.
சமையல் எண்ணெய்:சென்ற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி சரிவடைந்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இதன் இறக்குமதி அதிகரித்துள்ளது.ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், தாவர எண்ணெய் இறக்குமதி 10 சதவீதம் உயர்ந்து, 8.17 லட்சம் டன்னிலிருந்து, 8.97 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
இதில், சமையல் எண்ணெயின் பங்களிப்பு, 8.82 லட்சம் டன்னாகவும், உணவு சாரா எண்ணெயின் பங்களிப்பு 14,749 டன்னாகவும் உள்ளது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எஸ்.இ.ஏ) தெரிவித்துள்ளது.
சென்ற ஆகஸ்டில், ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், கச்சா பாமாயிலின் பங்களிப்பு 13 சதவீதம் உயர்ந்து, 6.20 லட்சம் டன்னாக உயர்ந்துஉள்ளது. இருப்பினும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி 2.7 சதவீதம் குறைந்து, 79,486 டன்னாக இருந்தது.
மேலும், சோயா எண்ணெய் இறக்குமதி, இரண்டு மடங்கு அதிகரித்து, 52,265 டன் என்ற அளவிலிருந்து, 1,10,758 டன் னாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி, 22 சதவீதம் சரிவடைந்து, 68,900 டன் என்ற அளவில் உள்ளது.இந்தியாவில், தாவர எண்ணெய் உற்பத்தி மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக, நம்நாடு, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து, அதிகளவில், இவற்றை இறக்குமதி செய்து வருகிறது. நடப்பாண்டில், பருவ மழை குறைந்துள்ளதால், சோயா போன்ற எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு குறையும் என்ற மதிப்பீடும் உள்ளது. இதனால், உள்நாட்டில் இதன் உற்பத்தி குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
பயன்பாடு:மேலும், பண்டிகை காலத்தால், உள்நாட்டில், எண்ணெய் பயன்பாடு மிகவும் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வரும் நவம்பர் வரையில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, மாதத்திற்கு தலா, ஒன்பது லட்சம் டன்னாக இருக்கும் என, மும்பையைச் சேர்ந்த பார்ம்டிரேட் வர்த்தகத்தின் நிர்வாக இயக்குனர் பிரதீப் தேசாய் தெரிவித்தார்.
குறிப்பாக, ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையில், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் இடம் பெறுவதால், பல்வேறு பலகாரங்கள் அதிக அளவில் தயாரிக்கப்படும். இதனால், எண்ணெய் பயன்பாடு உச்சபட்ச அளவில் இருக்கும்.பாமாயில்:கடந்த ஆண்டு நவம்பர் முதல், நடப்பாண்டு ஆகஸ்ட் வரையிலான, 10 மாத காலத்தில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி 72 சதவீதம் அதிகரித்து, 8.19 லட்சம் டன்னிலிருந்து, 14.05 டன்னாக உயர்ந்துள்ளது.
மேலும், ஒட்டு மொத்த எண்ணெய் இறக்குமதியில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பங்களிப்பு 18 சதவீதம் உயர்ந்தும்,கச்சா எண்ணெய் இறக்குமதி 82 சதவீதம் சரிவடைந்துள்ளது என, எஸ்.இ.ஏ. மேலும் தெரிவித்துள்ளது.நடப்பாண்டு செப்டம்பர் 1ம் தேதி வரையிலுமாக, நாட்டின் தாவர எண்ணெய் கையிருப்பு, 16.50 லட்சம் டன்னாக இருக்கும் என, எஸ்.இ.ஏ., மதிப்பீடு செய்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)