பிரிமியம் பெட்ரோல் விலை அதிகரிப்பு பிரிமியம் பெட்ரோல் விலை அதிகரிப்பு ... முந்திரி விவசாயிகளின் அடுத்த கவலை:போர்வெல் திட்டம் அமல் எப்போது? முந்திரி விவசாயிகளின் அடுத்த கவலை:போர்வெல் திட்டம் அமல் எப்போது? ...
சிமென்ட் விலையை உயர்த்த திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2012
01:02

புதுடில்லி:சரக்கு போக்குவரத்து கட்டணம் அதிகரித்துள்ளதால், சிமென்ட் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக, சிமென்ட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால், கட்டுமானச் செலவு எகிறும் என, வீடு கட்டுவோர் கவலை அடைந்துள்ளனர்.டீசல் விலை:மத்திய அரசு, நேற்று முன்தினம், டீசல் விலையை லிட்டருக்கு, 5.62 ரூபாய் உயர்த்தியது. இதையடுத்து, அகில இந்திய மோட்டார் வாகன போக்குவரத்து கூட்டமைப்பு, நாடு தழுவிய அளவில் சரக்கு கட்டணத்தில், 15 சதவீதம் உயர்த்தியுள்ளது.
இந்த அமைப்பின் கீழ், இந்தியாவில், 80 லட்சம் சரக்கு வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதனால், பலதரப்பட்ட நிறுவனங்களின் சரக்கு போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. இது குறித்து, ஜே.கே.லஷ்மி சிமென்ட் நிறுவனத்தின் இயக்குனர் சைலேந்திர சோக்சி கூறும்போது, மூலப்பொருட்களை கொண்டு வரவும், சிமென்டை சந்தைப்படுத்துவதற்கும் அத்தியாவசியமான, போக்குவரத்து செலவு உயர்ந்துள்ளது. பொதுவாக, ஒரு டன் சிமென்ட் தயாரிக்க, இரண்டு டன் மூலப் பொருட்கள் தேவைப்படுகின்றன.
இதன்படி, மூன்று டன் அளவிற்கான சரக்கு போக்குவரத்து செலவு உயர்ந்துள்ளது. இதனால், சிமென்ட் விலையை உயர்த்த வேண்டிய நிலையில் நிறுவனங்கள் உள்ளன.கடந்த சில மாதங்களாகவே ஒட்டுமொத்த கட்டுமானத் துறை மந்த நிலையில் இருந்து வருகிறது. இதன் தாக்கத்தால், வட இந்தியாவில், 50 கிலோ சிமென்ட் மூட்டை விலை, 250 -260 ரூபாயாக உள்ளது. சிமென்ட்டிற்கான தேவை குறைந்துள்ளதால், பல நிறுவனங்கள், அவற்றின் சிமென்ட் உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்தாமல் உள்ளன. சிமென்ட் நிறுவனங்களின், ஒட்டுமொத்த சிமென்ட் உற்பத்தி ஆண்டுக்கு, 33 கோடி டன்னாக உள்ளது.
உற்பத்தி திறன்:கடந்த 2010-11 மற்றும் 2011-12ம் நிதியாண்டுகளில், சிமென்ட் நிறுவனங்கள், அவற்றின் உற்பத்தி திறனில், 76 சதவீத அளவிற்கே உற்பத்தி மேற்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், சிமென்ட் விற்பனை, 6.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 22.5 கோடி டன்னாக இருந்தது. இதற்கு முந்தைய நிதியாண்டில், இந்த வளர்ச்சி, 5.1 சதவீதமாக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)