பதிவு செய்த நாள்
18 செப்2012
04:29
இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம், வரும் 2014-15ம் நிதியாண்டில், 1,000 கோடி டாலராக (55 ஆயிரம் கோடி ரூபாய்) உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இரு நாடுகளுக்கு இடையே, தடைஅற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலில் உள்ளது. இது, இந்நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தக வளர்ச்சிக்கு துணை புரிந்து வருகிறது. ஒப்பந்தம்:எனினும், இதைவிட மேம்பட்ட, ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக உள்ளதாக, இந்தியா தெரிவித்துஉள்ளது. ஆனால், இதற்கு இலங்கை இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.\
இந்நிலையில், இந்திய நிறுவனங்களின் கூட்டுடன், இலங்கையில், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் மற்றும் பொறியியல் பொருட்களுக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.திரிகோணமலையில் அமைக்க திட்டமிட்டுள்ள, இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில், தொழிற்சாலைகள் அமைக்க, இந்திய மோட்டார் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.இந்தியா - இலங்கை நாடுகளுக்குஇடையிலான பரஸ்பர வர்த்தகம், சென்ற 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில், முறையே, 363 கோடி டாலர் மற்றும் 516 கோடி டாலர் என்ற அளவிற்கு இருந்தது.
முன்னிலைஇலங்கையில் அதிக அளவில் முதலீடு மேற்கொண்டு வரும் நாடுகளில், இந்தியா முன்னணியில் உள்ளது. மதிப்பீட்டு காலத்தில், இலங்கை ஈர்த்த 55 கோடி டாலர் அன்னிய முதலீடுகளில், இந்தியாவின் பங்களிப்பு, 11 கோடி டாலராக உள்ளது.இலங்கையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், டாட்டா குழுமம், சீயட், நிக்கோலஸ் பிரமால், அசோக் லேலண்டு உள்ளிட்ட நிறுவனங்களும், ஸ்÷ட்ட் பேங்க் ஆப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ.,பேங்க், ஆக்சிஸ் பேங்க் மற்றும் எல்.ஐ.சி., ஆகியவை முதலீடு மேற்கொண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|