முன்கூட்டிய வரி செலுத்தியதில் மும்பை நிறுவனங்கள் முதலிடம்முன்கூட்டிய வரி செலுத்தியதில் மும்பை நிறுவனங்கள் முதலிடம் ... நாட்டின் வெங்காயம் ஏற்றுமதி 23 சதவீதம் அதிகரிப்பு நாட்டின் வெங்காயம் ஏற்றுமதி 23 சதவீதம் அதிகரிப்பு ...
இந்தியா - இலங்கை வர்த்தகம்: ரூ.55,000 கோடியாக உயரும்- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2012
04:29

இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம், வரும் 2014-15ம் நிதியாண்டில், 1,000 கோடி டாலராக (55 ஆயிரம் கோடி ரூபாய்) உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இரு நாடுகளுக்கு இடையே, தடைஅற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலில் உள்ளது. இது, இந்நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தக வளர்ச்சிக்கு துணை புரிந்து வருகிறது. ஒப்பந்தம்:எனினும், இதைவிட மேம்பட்ட, ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக உள்ளதாக, இந்தியா தெரிவித்துஉள்ளது. ஆனால், இதற்கு இலங்கை இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.\
இந்நிலையில், இந்திய நிறுவனங்களின் கூட்டுடன், இலங்கையில், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் மற்றும் பொறியியல் பொருட்களுக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.திரிகோணமலையில் அமைக்க திட்டமிட்டுள்ள, இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில், தொழிற்சாலைகள் அமைக்க, இந்திய மோட்டார் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.இந்தியா - இலங்கை நாடுகளுக்குஇடையிலான பரஸ்பர வர்த்தகம், சென்ற 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில், முறையே, 363 கோடி டாலர் மற்றும் 516 கோடி டாலர் என்ற அளவிற்கு இருந்தது.
முன்னிலைஇலங்கையில் அதிக அளவில் முதலீடு மேற்கொண்டு வரும் நாடுகளில், இந்தியா முன்னணியில் உள்ளது. மதிப்பீட்டு காலத்தில், இலங்கை ஈர்த்த 55 கோடி டாலர் அன்னிய முதலீடுகளில், இந்தியாவின் பங்களிப்பு, 11 கோடி டாலராக உள்ளது.இலங்கையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், டாட்டா குழுமம், சீயட், நிக்கோலஸ் பிரமால், அசோக் லேலண்டு உள்ளிட்ட நிறுவனங்களும், ஸ்÷ட்ட் பேங்க் ஆப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ.,பேங்க், ஆக்சிஸ் பேங்க் மற்றும் எல்.ஐ.சி., ஆகியவை முதலீடு மேற்கொண்டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)