பதிவு செய்த நாள்
18 செப்2012
04:32
மகாராஷ்டிரா:சென்ற ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், நாட்டின், வெங்காயம் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 7.90 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. மதிப்பு:இது, முந்தைய ஆண்டின், இதே காலத்தில்,மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (6.41 லட்சம் டன்) விட, 23 சதவீதம் அதிகம்.அதேசமயம், இதே காலத்தில், வெங்காயம் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 27 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 776 கோடியில்இருந்து, 548 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.விலை குறைவு:கடந்த நிதியாண்டின், முதல் ஐந்து மாத காலத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டின் இதே காலத்தில், வெங்காயத்தின் விலை, 49.71 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு, ஒரு டன் வெங்காயத்தின் சராசரி விலை, 13,790 ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில், இதுவரையிலுமாக, 6,934 ரூபாய் என்ற அளவில் உள்ளது.மத்திய அரசு, சென்ற ஏப்ரல் மாதம், வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை, டன்னுக்கு, 125 டாலராக நிர்ணயம் செய்தது. இது, சென்ற ஆண்டு, 200-250 டாலர் என்ற அளவில் இருந்தது.குறைந்தபட்ச ஏற்றுமதி விலை குறைப்பு காரணமாக, வெங்காயம் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில் குறைந்துள்ளது.
பருவ மழை:நடப்பு நிதியாண்டின், முதல் ஐந்து மாத காலத்தில், வெங்காயம் ஏற்றுமதி, மாதம் ஒன்றுக்கு, சராசரியாக, 1.50 லட்சம் டன்னுக்கும் அதிகமாக இருந்தது.
பொதுவாக பருவ மழை காலத்தில், வெங்காய ஏற்றுமதி குறையும். மேலும், தரம் குறைவாக இருக்கும் என்பதாலும், அதை வியாபாரிகள் அதிகம் கொள்முதல் செய்யமாட்டார்கள். இதனால், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், வெங்காயம் ஏற்றுமதி, 1.39 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.சென்ற 2011-12ம் ஆண்டில், நாட்டின் வெங்காயம் உற்பத்தி, சாதனை அளவாக, 1.53 கோடி டன்னாக அதிகரித்திருந்தது. இது, முந்தைய ஆண்டில், 1.51 கோடி டன்னாக இருந்தது. மதிப்பீட்டு காலத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பங்களிப்பு, 49 லட்சம் டன்னிலிருந்து, 50.30 லட்சம் டன்னாக உயர்ந்திருந்தது என்பது குறிப் பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|