பதிவு செய்த நாள்
18 செப்2012
04:34
புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான, ஐந்து மாத காலத்தில், நாட்டின் உருக்கு பொருட்கள் இறக்குமதி, 33.20 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை (23.90 லட்சம் டன்) விட, 39 சதவீதம் அதிகமாகும்.உள்நாட்டில், உருக்கு பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதே சமயம், இவற்றிற்கான தேவை குறைந்துள்ளது. இந்நிலையிலும், உருக்கு பொருள்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது. \\
பயன்பாடு:மதிப்பீட்டு காலத்தில், உருக்கு பொருட்கள் உற்பத்தி, 4.3 சதவீதம் உயர்ந்து, 3.04 கோடி டன்னிலிருந்து, 3.17 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இதன் பயன்பாடு, 6.9 சதவீதம் அதிகரித்து, 2.90 கோடி டன்னில்இருந்து, 3.10 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், உருக்கு பொருட்கள் ஏற்றுமதி, 4 சதவீதம் சரிவடைந்து, 19.30 லட்சம் டன்னிலிருந்து, 18.50 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.கணக்கீட்டு காலத்தில், கலப்பு அல்லாத உருக்கு பொருட்கள் இறக்குமதி, 40.2 சதவீதம் உயர்ந்து, 18.50 லட்சம் டன்னிலிருந்து, 26 லட்சம் டன்னாகவும், கலப்பு உருக்கு பொருட்கள் இறக்குமதி, 33 சதவீதம் அதிகரித்து, 5.40 லட்சம் டன்னிலிருந்து, 7.20 லட்சம் டன்னாகவும் அதிகரித்துஉள்ளது.
ஜப்பான், கொரிய ஆகிய நாடுகளுடன், இந்தியா பொருளாதார ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி, இந்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கான சுங்க வரி, படிப்படியாக குறைக்கப்பட்டு, வரும் 2016-17ம் நிதியாண்டில் முழுமையாக நீக்கப்பட உள்ளது.
இறக்குமதி வரி:இந்த ஒப்பந்தத்தின் கீழ், கடந்த 2010ம் ஆண்டு நிலவரப்படி, ஜப்பான், கொரியா நாடுகளின் உருக்குப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த, 5 சதவீத இறக்குமதி வரி, தற்போது, 3.13 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதர நாடுகளின் உருக்கு பொருட்கள் இறக்குமதிக்கு, 7.5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|