உருக்கு இறக்குமதி 33 லட்சம் டன்உருக்கு இறக்குமதி 33 லட்சம் டன் ... தங்கம் விலை சற்று குறைவு  தங்கம் விலை சற்று குறைவு ...
ரிசர்வ் வங்கி நடவடிக்கை:வங்கி ரொக்க இருப்பு விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2012
04:36

மும்பை:ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்.,) மட்டும் 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதையடுத்து, வங்கிகள், ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய சி.ஆர்.ஆர்., 4.75 சதவீதத்திலிருந்து, 4.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.நிதி பற்றாக்குறை:ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ.சுப்பாராவ், நேற்று, இடைக்கால நிதி ஆய்வு அறிக்கையை வெளியிட்டார். அதில், வங்கிகளுக்கான "ரெப்போ ரேட்' விகிதங்கள் மற்றும் சட்டப்பூர்வ முதலீட்டு விகிதம் (எஸ்.எல்.ஆர்.,) போன்றவை குறைக்கப்படவில்லை. நாட்டின், நிதி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்துஉள்ளதால், வட்டி விகிதங்கள் குறைக்கப்படவில்லை.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, மைனஸ் 0.1 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது. எனவே, நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியை கருத்தில் கொண்டு, வங்கிகளுக்கான "ரெப்போ ரேட்' விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும் என, பல்வேறு தொழில் துறை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.ஆனால், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் பணவீக்கம் 7.55 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, ஜூலை மாதத்தில்,6.87 சதவீதமாக குறைந்து காணப்பட்டது.
பணவீக்கம்:பணவீக்கம் அதிகரித்துள்ளதையடுத்து, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான "ரெப்போ ரேட்' விகிதங்களை குறைக்கவில்லை. தற்போதைய நிலவரப்படி, வங்கிகள், குறைந்த கால அடிப்படையில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வாங்கும் கடனுக்கான "ரெப்போ ரேட்', 8 சதவீதமாகவும், வங்கிகள், ரிசர்வ் வங்கிக்கு அளிக்கும் கடனுக்கு வழங்கப்படும் வட்டி விகிதமான,"ரிவர்ஸ் ரெப்போ ரேட்', 7 சதவீதமாகவும் உள்ளன. இதில், மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.சென்ற ஆகஸ்ட் 1ம் தேதி, ரிசர்வ் வங்கி, அதன் காலாண்டு ஆய்வுக் கொள்கையில், எஸ்.எல்ஆர்., எனப்படும், வங்கிகள் திரட்டும் மொத்த டெபாசிட்டில், அரசு கடன்பத்திரங்களில் கட்டாயம் மேற்கொள்ளவேண்டிய, குறைந்த பட்ச முதலீட்டை 1 சதவீதம் குறைத்து, 24 சதவீதத்திலிருந்து, 23 சதவீதமாக குறைத்தது. இதனால், வங்கிகளின் புழக்கத்திற்கு, 66 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.எல்.ஆர்., விகிதம் 23 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கிகள் திரட்டும் மொத்த டெபாசிட்டில், குறிப்பிட்ட சதவீதத் தொகையை ரிசர்வ் வங்கியில், வைக்க வேண்டிய தொகையே ரொக்க இருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்.,) ஆகும். செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள, இந்த சி.ஆர்.ஆர்., குறைப்பால், வங்கிகளுக்கு கூடுதலாக, 17 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என, சுப்பாராவ் தெரிவித்தார்.ஊக்குவிப்பு திட்டங்கள்:ரிசர்வ் வங்கியின், சி.ஆர்.ஆர்., குறைப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையை வரவேற்கிறேன். வரும் அக்டோபர் 30ம் தேதிக்குள், மத்திய அரசு, பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை அறிவிக்க உள்ளது.
பொருளாதார வளர்ச்சி:இதையடுத்து, அக்டோபர் 30ம் தேதி, ரிசர்வ் வங்கியின், இரண்டாவது காலாண்டு ஆய்வுஅறிக்கையில் தொழில் துறைக்கு சாதகமான அம்சங்கள் இடம் பெறும் என, எதிர்பார்க்கலாம்.கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 6.5 சதவீதமாக மிகவும் குறைந்திருந்தது.
மேலும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இந்த வளர்ச்சி 5.5 சதவீதமாக மேலும் குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், இந்த வளர்ச்சி 8 சதவீதமாக இருந்தது.\
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு, சென்ற வாரம் பன்முக பிராண்டு சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இந்திய விமான துறையில், வெளிநாட்டு விமானச் சேவை நிறுவனங்கள், 49 சதவீத அளவிற்கு முதலீடு மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர, நாட்டின் நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ஒரு லிட்டர் டீசல் விலை, 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய குடும்பம் ஒன்றிற்கு, ஆண்டிற்கு ஆறு சமையல் எரிவாயு சிலிண்டர் என, உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால், நிதிப்பற்றாக்குறை குறைந்து, பொருளாதார வளர்ச்சி மேம்படும். இவ்வாறு நிதி அமைச்சர் கூறினார்.
திட்டக்குழு:மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறுகையில், "ரிசர்வ் வங்கி, சி.ஆர்.ஆர்., விகிதத்தை குறைத்துள்ளது வரவேற்க கூடிய அம்சமாகும். இது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வழிவகுக்கும். இது, தற்போதைய நிலையில், மிகவும் சரியான நடவடிக்கை என்பதுடன், அத்தியாவசியமானதும் ஆகும்' என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)