பதிவு செய்த நாள்
18 செப்2012
04:38
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் தொடக்க தினமான திங்கட்கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான, சி.ஆர்.ஆர்., விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தது. இதையடுத்து, வங்கிகள் வசம், 17 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும் பட்சத்தில், முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்க கூடும் என்ற நிலைப்பாட்டால், பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.
இருப்பினும், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், வங்கி, பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது.இருப்பினும், நுகர் பொருட்கள், ஆரோக்கிய பராமரிப்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 78.04 புள்ளிகள் அதிகரித்து, 18,542.31 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,715.03 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,480.54 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஜிந்தால் ஸ்டீல், லார்சன் அண்டு டூப்ரோ எஸ்.பீ.ஐ.,ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், உள்ளிட்ட 18 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், ஐ.டி.சி., டி.சி.எஸ்., டாக்டர் ரெட்டீஸ் லேப் உள்ளிட்ட, 12 நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 32.35 புள்ளிகள் அதிகரித்து, 5,610 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|