பதிவு செய்த நாள்
19 செப்2012
16:47
சென்னை : ஏர் இந்தியாவில் புதிதாக சேர்க்கப்பட்ட ட்ரீம்லைனர் போயிங் 787 விமானம் தனது பயணத்தை தொடங்கியது. முதற்கட்டமாக டில்லியில் இருந்து சென்னைக்கு இந்த விமான சேவை துவக்கப்பட்டது.
அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம், அதிநவீன, "போயிங், 787 ட்ரீம்லைனர்' ரக விமானங்களை தயாரித்து, விற்று வருகிறது. இந்த ரகத்தில், 27 விமானங்களை வாங்க, ஏர்-இந்தியா நிறுவனம், 2006ல், "ஆர்டர்' தந்தது. அடுத்த, இரண்டு ஆண்டுகளில், விமானங்களை, "சப்ளை' செய்ய வேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால், வடிவமைப்பு, தயாரிப்பில் இருந்த பிரச்னைகள் காரணமாக, குறித்த நேரத்தில், விமானத்தை சப்ளை செய்ய, போயிங் நிறுவனத்தால் முடியவில்லை.இந்நிலையில், நான்கு ஆண்டு தாமதத்துக்கு பின், முதல் விமானம், கடந்தவாரம் டில்லி வந்தடைந்தது.
ஏர் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ள ட்ரீம்லைனர் போயிங் 787 விமானம் தனது சேவையை இன்று முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை டில்லியில் இருந்து புறப்பட்ட விமானம் மதியம் போல் சென்னை வந்தடைந்தது. இடையில் எங்கும் நிற்காமல், தொடர்ச்சியாக, 15 ஆயிரம் கி.மீ., தூரம் பறக்கக் கூடியது. சுமார் 210 முதல், 290 இருக்கைகளைக் கொண்டது இந்த விமானம்.
ட்ரீம்லைனரில் பயணம் செய்தது குறித்து பயணிகள் கூறுகையில், சொகுசு இருக்கைகள் மிகவும் வசதியாக இருந்தது. பிற விமானங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணமே இதற்கும் வசூலிப்பது சந்தோஷமாக உள்ளது. பயணம்தூரமும் அரை நேரம் குறைவு. இந்த விமானம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|