பதிவு செய்த நாள்
20 செப்2012
00:20
புதுடில்லி: உருக்கு நிறுவனங்களின் விரிவாக்க திட்டங்களால், நடப்பு நிதியாண்டில், உருக்கு உற்பத்தி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 8.6 கோடி டன்னை எட்டும் என, மத்திய உருக்கு துறை செயலர் டீ.ஆர்.எஸ். சவுத்ரி தெரிவித்தார்.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், உருக்கு உற்பத்தி, 7.40 கோடி டன் என்ற அளவில் இருந்தது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், நாட்டின் உருக்கு ஏற்றுமதி, 19.19 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 1 சதவீதம் குறைவாகும். மதிப்பீட்டு காலத்தில், மேற்கொள்ளப்பட்ட மொத்த உருக்கு ஏற்றுமதியில், கலப்பு அல்லாத உருக்கு பொருட்களின் பங்களிப்பே மிகவும் அதிகளவில் உள்ளது.
பொதுத் துறையை சேர்ந்த ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (செயில்) நிறுவனம், 75 ஆயிரம் கோடி ரூபாய் திட்டச் செலவில், விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதுதவிர, தனியார் உருக்கு தயாரிப்பு நிறுவனங்களும் விரிவாக்க நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றன.இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டில், உருக்கு உற்பத்தி இலக்கு எட்டப்படும் என, சவுத்ரி மேலும் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|