சென்னை வந்தது ட்ரீம்லைனர் விமானம்சென்னை வந்தது ட்ரீம்லைனர் விமானம் ... செயற்கைக்கோள் அனுப்பிய தகவல்...கரும்பு பயிர் பரப்பு இலக்கை விஞ்சும் செயற்கைக்கோள் அனுப்பிய தகவல்...கரும்பு பயிர் பரப்பு இலக்கை விஞ்சும் ...
வெளிச்சந்தைக்கு 50 லட்சம் டன் கோதுமை:விலை உயர்வை தடுக்க நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2012
00:36


புதுடில்லி:வெளிச்சந்தைக்கு மேலும், 50 லட்சம் டன் கோதுமையை விற்பது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருவதாக, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்துள்ளார்.
கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க உள்ளது.
அளவிற்கு அதிகமாக கையிருப்பு, போதுமான கிடங்கு வசதி இல்லாதது, மழைக்கால பாதிப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, கடந்த ஜூன் மாதம், 30 லட்சம் டன் கோதுமையை வெளிச் சந்தையில் விற்க அனுமதி அளித்தது.
இதன்படி, பிஸ்கட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பெரிய நிறுவனங்கள் மற்றும் மாவு ஆலைகளுக்கு மொத்தமாக கோதுமை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்ற ஜூலை நிலவரப்படி, 13 லட்சம் டன் கோதுமை வெளிச்சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நடப்பு செப்டம்பர் மாத இறுதிக்கும் மேலும், 10 லட்சம் டன் கோதுமை விற்பனை செய்யப்படும் என, தெரிகிறது.
இந்நிலையில், மேலும் 50 லட்சம் டன் கோதுமையை வெளிச்சந்தையில் விற்க அனுமதிப்பதன் மூலம், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், மொத்தம் 80 லட்சம் டன் கோதுமை, வெளிச் சந்தையில் விற்கப்பட உள்ளது.மத்திய அரசு, பொதுத் துறையை சேர்ந்த இந்திய உணவுக் கழகம் மூலம், விவசாயிகளிடம் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை கொள்முதல் செய்து, பொது வினியோக திட்டத்திற்காக வழங்கி வருகிறது.
இந்நிறுவனம், தொடக்கத்தில், ஒப்பந்த புள்ளிகளை வெளியிட்டு, ஒரு குவிண்டால் கோதுமையை 1,170 ரூபாய் க்கு வெளிச் சந்தையில் விற்பனை செய்தது. இந்த விலை, சென்ற ஆகஸ்ட் மாதம் 1,285 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
கடந்த ஓராண்டில், கோதுமை விலை 23 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது, மொத்த விற்பனையில், ஒரு கிலோ கோதுமை 15 - 22 ரூபாய் என்ற அளவில் உள்ளது. இது, சென்ற மாதம், 16 - 23 ரூபாயாக இருந்தது.சில்லரை விற்பனையில், ஒரு கிலோ கோதுமை 26-30 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கடந்த 2011-12ம் பயிர் பருவத்தில் (ஜூலை - ஜூன்), நாட்டின் கோதுமை உற்பத்தி, வரலாறு காணாத வகையில், 9.39 கோடி டன்னாக இருந்தது. இதே காலத்தில், மத்திய அரசின் கோதுமை கொள்முதல், 3.81 கோடி டன் என்ற புதிய உச்சத்தை எட்டியது.சென்ற ஆகஸ்ட் நிலவரப்படி, நாட்டின் கோதுமை கையிருப்பு, 4.61 கோடி டன்னாக இருந்தது. @காதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் வீணாவதை தடுக்க, மத்திய அர” நாடு முழுவதும் கிடங்குகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)