செயற்கைக்கோள் அனுப்பிய தகவல்...கரும்பு பயிர் பரப்பு இலக்கை விஞ்சும்செயற்கைக்கோள் அனுப்பிய தகவல்...கரும்பு பயிர் பரப்பு இலக்கை விஞ்சும் ... தமிழக தீப்பெட்டி தயாரிப்பு துறையில்... குடிசை தொழிலால் அழிந்து வரும் பெரிய நிறுவனங்கள் தமிழக தீப்பெட்டி தயாரிப்பு துறையில்... குடிசை தொழிலால் அழிந்து வரும் ... ...
விமான துறையில் அன்னிய முதலீடு: ஜெட் ஏர்வேஸ் முதல் ஒப்பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2012
00:50

புதுடில்லி:மத்திய அரசு, கடந்த வாரம், விமானச் சேவை துறையில், 49 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து, உள்நாட்டில் விமானச் சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், அன்னிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதில், தீவிரம் காட்டத் துவங்கியுள்ளன.
பங்கு விற்பனை:மத்திய அரசின், அறிவிப்பை தொடர்ந்து, அபுதாபியைச் சேர்ந்த எட்டி ஹேட் நிறுவனம், இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் குறிப்பிட்ட அளவிலான பங்குகளை வாங்க உள்ளது. பங்கு முதலீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, தெரிகிறது. இது, இந்திய விமான சேவை நிறுவனங்களில், அன்னிய விமான நிறுவனங்கள் முதலீடு மேற்கொள்ள அனுமதி அளித்த பின்னர், மேற் கொள்ளப்படும் முதல் ஒப்பந்தமாக இருக்கும் என, தெரிகிறது.
இதையடுத்து, கடும் நிதி நெருக்கடியில் உள்ள விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்திலும், விரைவில் அன்னிய விமான நிறுவனமொன்று பங்கு முதலீடு மேற்கொள்ள உள்ளது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் அனைத்தும் ஏற்கனவே முடிந்து விட்டது. மத்திய அரசின் அனுமதிக்காகவே இதுவரை கிங்பிஷர் நிறுவனம் காத்திருந்தது.இதையடுத்து, மேலும் பல சிறிய விமான நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.
போக்குவரத்து:இது ஒருபுறமிருக்க, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், உள்நாட்டில் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 43.69 லட்சமாக குறைந்துள்ளது. இது, முந்தைய மாதத்தில் 45.37 லட்சமாக இருந்தது.அதிக அளவிலான பயணிகளை (12.05 லட்சம்) கையாண்டதில், இண்டிகோ நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அதிகரிப்பு:இரண்டாவது இடத்தை, ஜெட் குழுமத்தை சேர்ந்த ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஜெட் லைட் நிறுவனங்கள் (11.10 லட்சம்) பிடித்துள்ளன. அடுத்த இடங்களில் ஏர் - இந்தியா (7.94 லட்சம்), கோ ஏர் (3.24 லட்சம் ), கிங்பிஷர் (1.38 லட்சம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.நடப்பாண்டில் ஆகஸ்ட் வரையிலான, எட்டு மாத காலத்தில், உள்நாட்டில் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 3.98 கோடியாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டில், 3.96 கோடியாக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)