பதிவு செய்த நாள்
20 செப்2012
10:31
மும்பை : கடந்த செவ்வாய் அன்று 46புள்ளிகள் வீழ்ச்சியுடன் முடிந்த சென்செக்ஸ், விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு பின்னர் இன்று துவங்கியுள்ளது. காலை வர்த்தக நேர துவக்கத்திலேயே 204 புள்ளிகள் வீழ்ச்சியுடன் துவங்கியுள்ளது மும்பை பங்குசந்தை. சில்லறை வர்த்தக்கத்தில் நேரடி அந்நிய முதலீடு, டீசல் விலை உயர்வு போன்றவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா, மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றார். இதனால் ஆளும் மத்திய காங்கிரஸ் கட்சி ஆட்டம் கண்டுள்ளது. இதன் தாக்கம் இந்திய பங்குசந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 204.08 புள்ளிகள் சரிந்து 18,291.93-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 65.15 புள்ளிகள் சரிந்து 5,534.90-ஆகவும் காணப்பட்டது. இந்திய பங்குசந்தைகள் போல் ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஜப்பான் மற்றும் ஹாங்காங் பங்குசந்தைகளும் சரிவுடன் துவங்கி இருக்கிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|