மின் தடை அதிகரிப்பால் தொழிற்சாலைகள் முடக்கம்மின் தடை அதிகரிப்பால் தொழிற்சாலைகள் முடக்கம் ... நகல் இயந்திர விற்பனை ஏழு சதவீதம் வளர்ச்சி நகல் இயந்திர விற்பனை ஏழு சதவீதம் வளர்ச்சி ...
அமெரிக்க கோடீஸ்வரர்களில் பில்கேட்ஸ் முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2012
00:23

நியூயார்க்:அமெரிக்க கோடீஸ்வரர்கள் பட்டியலில், மைக்ரோசாப்ட் நிறுவனர், பில்கேட்ஸ் முதலிடத்தில் உள்ளதாக,"போர்ப்ஸ்' இதழ் தெரிவித்துள்ளது.நடப்பு 2012ம் ஆண்டில், இதுவரையிலுமாக, நிகர சொத்து மதிப்பின் அடிப்படையில், கணக்கிடப்பட்டுள்ள அமெரிக்க கோடீஸ்வரர்கள் பட்டியலை, அந்நாட்டைச் சேர்ந்த, "போர்ப்ஸ்' இதழ் வெளியிட்டுஉள்ளது.
இதில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், 6,600 கோடி டாலர் (3.63 லட்சம் கோடி ரூபாய்) சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். பில்கேட்சின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டை விட, நடப்புஆண்டில், 10 சதவீதம் அதிகரித்துள்ளது.இதையடுத்து, தொழிலதிபர் வாரன் பபெட், 4,600 கோடி டாலருடன் இரண்டாவது இடத்திலும், ஆரக்கிள் நிறுவனத்தின் துணை நிறுவனர் லாரி எலிசன், 4,100 கோடி டாலருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
மேலும், ஜார்ஜ் சோரோ (1,900 கோடி டாலர்), பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் (940 கோடி டாலர்), எலிசன் சுவிடென்ட்(800 கோடிடாலர்),ஒயிட்கேட்ஸ் (700 கோடிடாலர்)ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர். அமெரிக்காவில், குறிப்பாக, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் நகரங்களில், ரியல் எஸ்டேட் விலை உயர்ந்துள்ளது. இதனால், இத்துறை சார்ந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது. 400 கோடீஸ்வரர் களின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டை விட, 20 ஆயிரம் கோடி டாலர் உயர்ந்து, 1.70 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதற்கு, பங்கு மதிப்பு உயர்வே முக்கிய காரணம் என, "போர்ப்ஸ்' இதழ் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)