பதிவு செய்த நாள்
26 செப்2012
00:29
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய்க்கிழமையன்று மந்தமாக இருந்தது. இருப்பினும், பங்குகளின் விலை குறைந்திருந்ததை சாதகமாகப் பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியதை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சற்று ஏற்றத்துடன் முடிவடைந்தது.
ஒரு சில ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை, ஜெர்மனி குறைத்து மதிப்பிட்டதை அடுத்து, ஐரோப் பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் விறு விறுப்பின்றியே காணப்பட்டது. இவை, இந்திய பங்குச் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. நேற்று நடை பெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், நுகர் பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 21.07 புள்ளிகள் அதிகரித்து, 18,694.41 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,790.01 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,636.16 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், பீ.எச்.இ.எல்., சிப்லா, ஐ.டி.சி., இந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட 12 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், ஜிந்தால் ஸ்டீல், மாருதி, உள்ளிட்ட 18 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 4.30 புள்ளிகள் உயர்ந்து, 5,673.90 புள்ளிகளில் நிலை கொண் டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,702.70 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,652.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|