பதிவு செய்த நாள்
27 செப்2012
00:28
புதுடில்லி:சென்ற 2011ம் ஆண்டில், இந்தியாவில், பீ.பி.ஓ., என்று சுருக்கமாக அழைக்கப்படும், பணிகளை வெளியிலிருந்து நிறைவேற்றித் தரும் துறையின் சந்தை மதிப்பு, 6,930 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது என, ஆய்வு நிறுவனமான, "கார்ட்னர்' தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில், ஆசிய பசிபிக் நாடுகளின் பீ.பி.ஓ., வர்த்தகத்தில், ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளின் பங்களிப்பு, குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.
சென்ற 2011ம் ஆண்டில், ஆசிய பசிபிக் நாடுகளின் பீ.பி.ஓ., சந்தை மதிப்பு, 590 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது.இதில், ஆஸ்திரேலியாவின் பீ.பி.ஓ., துறையின் சந்தை மதிப்பு, 463 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. இது, இந்தியாவைக் காட்டிலும் (126 கோடி டாலர்) மூன்று மடங்கு அதிகமாகும்.
தற்போது, வங்கி, தொலைத்தொடர்பு, சுற்றுலா, சில்லரை வர்த்தகம், போக்குவரத்து போன்ற துறைகளில், கம்ப்யூட்டர் வாயிலாக, பணிகளை வெளியிலிருந்து நிறைவேற்றி தரும், பீ.பி.ஓ., துறை சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது.இதன் விளைவாக, ஆசிய பசிபிக் நாடுகளின் சந்தை மதிப்பு, நடப்பு 2012ம் ஆண்டில், 645 கோடி டாலராகவும், 2016ம் ஆண்டில், 950 கோடி டாலராகவும் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|