பதிவு செய்த நாள்
27 செப்2012
00:31
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், புதன் கிழமையன்று, மிகவும் மந்தமாகவே இருந்தது. சர்வதேச நிலவரங் களால், காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியது முதல், முடியும் வரையில், பல துறைகளைச் சேர்ந்த நிறுவ னப் பங்குகளின் விலை, சரிவடைந்து காணப்பட்டது.
ஸ்பெயின் நாட்டின், நிதி நெருக்கடிக்கு தீர்வு காணப்படாததால், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைக ளில் வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. இதுவும், இந்திய பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், தொலைத்தொடர்பு, நுகர்பொருள்கள், மருந்து, ரியல் எஸ்டேட் மற்றும் பொதுத் துறை நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தன.
பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 62.24 புள்ளிகள் குறைந்து, 18,632.17 புள்ளிகளில்நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,670.48 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,573.18 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 19 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 11 நிறுவனப்பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' வர்த்தகம் முடி யும் போது, 10.45 புள்ளிகள் குறைந்து, 5,663.45 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிக பட்சமாக, 5,672.80 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 5,638.65 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|