இந்திய பீ.பி.ஓ., துறையின் சந்தை மதிப்பு ரூ.6,930 கோடிஇந்திய பீ.பி.ஓ., துறையின் சந்தை மதிப்பு ரூ.6,930 கோடி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கரும்பு சாகுபடி பரப்பு குறைந்ததால்... நாட்டின் சர்க்கரை உற்பத்தி 2.45 கோடி டன்னாக குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2012
00:37

வரும் சர்க்கரை பருவத்தில் (அக்.,- செப்.,), நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.42 -2.45 கோடி டன்னாக குறையும் என, மத்திய உணவு அமைச்சகம், மதிப்பீடு செய்துள்ளது.மாநில அரசுகள் அளித்துள்ள தகவல்கள் அடிப் படை யில், வரும் சர்க்கரை பருவத்தில், இதன் உற்பத்தி, கடந்த ஆண்டை விட, குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த முழு புள்ளி விவரம், அடுத்த வாரம் நடக்க உள்ள சர்க்கரை துறையின் ஆணையர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரும்பு சாகுபடி:நடப்பு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ள 2011-12ம் பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.62 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. நாட்டின், கரும்பு அதிகளவில் விளையும், முக்கிய மாநிலங்களில், நடப்பு கரீப் பருவத்தில், காலம் தவறிய மழைப்பொழிவால், கரும்பு சாகு படி பாதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பின் தங்கிய மழையால், கரும்பின் பிழிதிறன், சரிவடைய வாய்ப் பில்லை என்ற மதிப்பீடும் உள்ளது.
நடப்பு பருவத்தில், 52.80 லட்சம் ஹெக்டேரில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்றும், இதன் வாயிலாக, 3.42 கோடி டன் கரும்பு உற்பத்தியாகும் என, முதல் முன்கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப் பட்டுள் ளது.சென்ற பருவத்துடன் ஒப்பிடும் போது, நடப்பு பருவத்தில், கரும்பு மற்றும் சர்க்கரை உற்பத்தி குறையும் என்றாலும், சர்க்கரை பிழிதிறன் சராசரியாக, 9.5-10 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, உணவு அமைச் சகத்தை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சர்க்கரை பயன்பாடு:இந்தியாவில், தற்போது, சர்க்கரைக்கான தேவை ஆண்டுக்கு, 2.20-2.30 கோடி டன் என்ற அளவில் உள்ளது. இந்நிலையில், கரும்பு மற்றும் சர்க்கரை உற்பத்தி குறைந்தாலும், அது உள்நாட்டு தேவைக்கும் அதிகமாகவே இருக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.காலம் தவறிய மழைப் பொழிவு மற்றும் போதிய மழை இல்லாததால், வரும் 2012-13ம் கரும்பு அரவை பருவத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தில், கரும்பு சாகுபடி பரப்பளவு குறையும். இதனால், இம்மாநிலத்தின் சர்க்கரை உற்பத்தி, 30 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.
இருப்பினும், அதிகளவில் கரும்பு உற்பத்தியாகும் உத்தர பிரதேச மாநிலத்தில், கரும்பு சாகுபடியும், சர்க்கரை உற்பத்தியும் அதிகரிக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த அளவில், சர்க்கரை உற்பத்தி யில் அதிக பாதிப்பு இருக்காது என்ற மதிப்பீடும் உள்ளது.கடந்த ஆண்டு, நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தி யான, 2.60 கோடி டன்னில், மகாராஷ்டிராவின் பங்களிப்பு, 89 லட்சம் டன்னாக இருந்தது.இந்நிலையில், மகாராஷ்டிராவில், வரும் பருவத்தில் கரும்பு உற்பத்தி குறையும் என்ற மதிப்பீட்டால், இம்மாநிலத்தின் சர்க்கரை உற்பத்தி, 62 லட்சம் டன்னாக குறையும்.
உத்தர பிரதேசம்:ஆனால், உ.பி.,மாநிலத்தில், கூடுதலாக, 90ஆயிரம் ஹெக்டேரில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, இங்கு சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கும். இதனால், நாட்டின் சர்க்கரை உற்பத்தியில், அதிக பாதிப்பு இருக்காது. உத்தர பிரதேச மாநிலத்தில், கரும்பு சாகுபடி பரப்பளவு, 22.70 லட்சம் ஹெக்டேரில் இருந்து, தற்போது, 23.60 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளதாக, அரசு, வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)