பதிவு செய்த நாள்
27 செப்2012
13:55
குடும்பத்துடன் வெளியூர் புறப்படும் போது, அலுவலக பணிக்காக அவசர அவசரமாக கிளம்பும் போது, கார் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், பெரும் சிக்கல் தான். கார் இக்னிஷியனை பல முறை, ஆன் செய்த பிறகும், சிக்கல் நீடித்தால், கார் பேட்டரியில் குழப்பம் இருக்கலாம்.கார் பேட்டரி என்பது, ஆல்டர்னேட்டர் உதவியுடன் சக்தியை உருவாக்கும் சாதனம். இது, மின்சக்தியை சேமித்து வைக்கும்; சார்ஜ் செய்யும் நேரத்தில், மின்சக்தியை பெற்றுக் கொள்ளும்.
பேட்டரியில், சார்ஜ் குறைந்து விடும் பிரச்னை தான் கார்களுக்கு ஏற்படும். காரை வாங்கி விட்டு, அதன் பயன்படுத்தாமல், வைத்திருந்தாலே, இந்த சிக்கல் ஏற்படும். பேட்டரி பழுதை உறுதி செய்ய சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
* இக்னிஷியனை ஆன் செய்தால், கார் ஸ்டார்ட் ஆக மறுப்பது, முகப்பு விளக்குகளை எரிய விட்டால், எரிய மறுப்பது போன்றவை, கார் பேட்டரி சார்ஜ் குறைந்து இருக்கிறது என்பதை தெரிவித்து விடும். குளிர் காலத்தில் கூட, பேட்டரி சார்ஜ் குறையும் பிரச்னை ஏற்படும்.
* கார் பேட்டரியில் சார்ஜ் குறைந்து விட்டது என்பதை உறுதி செய்ய, வோல்ட் மீட்டரை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். முதலில், பேட்டரி மற்றும் காருக்கான இணைப்புகளை, கார் மேனுவல் புத்தகத்தில் கூறியுள்ளது போல, துண்டிக்க வேண்டும். தற்காலிகமாக, 9 வோல்ட் அல்காலைன் பேட்டரியை, காருடன் இணைக்க வேண்டும்.
* வோல்ட் மீட்டரை, 0-50 வோல்ட் என்ற நிலைக்கு செட் செய்து கொள்ள வேண்டும்.
* இதன் பிறகு, வோல்ட் மீட்டரில் உள்ள சிவப்பு நிற லீடை, கார் பேட்டரியின், பாஸிடிவ், இணைப்பில் சொருக வேண்டும். வோல்ட் மீட்டரின் கறுப்பு நிற லீடை, பேட்டரியின், நெகட்டிவ் இணைப்பில் சொருக வேண்டும்.
* இதன் பின்னர், வோல்ட்மீட்டரை சரிபார்த்தால், 12.6 முதல், 12.8 வோல்ட் வரை இருக்க வேண்டும். 10 வோல்ட்டுக்கும் குறைவாக இருந்தால், பேட்டரியில் சார்ஜ் குறைந்து விட்டது என்பதை புரிந்து கொள்ளலாம். அருகில் உள்ள கார் மெக்கானிக்கிடம் காரை கொடுத்து, பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|