பதிவு செய்த நாள்
28 செப்2012
00:12
புதுடில்லி:ரிசர்வ் வங்கி, அண்மையில், வங்கிகளுக்கான, ரொக்க இருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்.,) 0.25 சதவீதம் குறைத்து, 4.50 சதவீதமாகக் குறைத்தது.
கூடுதல் நிதி:இதனால், வங்கிகளுக்கு கூடுதலாக, 17 ஆயிரம் கோடி நிதி கிடைத்துள்ளது. இதைஅடுத்து, பல வங்கிகளும், வீட்டு வசதிக்கு நிதி உதவி வழங்கி வரும் நிறுவனங்களும், வட்டி குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.தேசிய வீட்டு வசதி வங்கி (என்.எச்.பி.,), கடன்களுக்கான வட்டி விகிதத்தை, 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இவ்வங்கி, வீட்டு வசதிக்கு கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு, குறைந்த வட்டியில், நேரடியாக கடன் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வங்கியைத் தொடர்ந்து, வீட்டு வசதிக்கு கடன் வழங்கி வரும் எச்.டீ.எப்.சி., மற்றும் எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களும், வீட்டு வசதி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தேசிய வீட்டுவசதி வங்கி, கடனுக்கான வட்டி விகிதத்தை, 10.50 சதவீதத்திலிருந்து, 10 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இதுகுறித்து, இவ்வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.வி.வர்மா கூறியதாவது: வங்கி, சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டும், வீட்டு வசதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதனால், தனிநபர்கள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவது அதிகரிக்கும். குறிப்பாக, மாறுபடும் வட்டி விகிதத்திலான வீட்டு வசதி கடனுக்கான வட்டி குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த 2011-12ம் நிதியாண்டில், இவ்வங்கி, வீட்டு வசதி துறைக்கு, 14,450 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. இது, அதற்கும் முந்தைய நிதியாண்டில், வழங்கப்பட்ட தொகையை விட, 20 சதவீதம் அதிகமாகும்.
அடிப்படை வட்டி விகிதம்:கடந்த நிதியாண்டு முடியும் போது, இவ்வங்கி வழங்கிய மொத்த கடன் அளவு, 490 கோடி ரூபாயாக இருந்தது.ரிசர்வ் வங்கியின், சி.ஆர்.ஆர்., குறைப்பிற்கு பிறகு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதன் அடிப்படை வட்டி விகிதத்தை, 9.75 சதவீதமாகக் குறைத்துள்ளது. மேலும், இவ்வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தையும், 0.25 சதவீதம் குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|