பதிவு செய்த நாள்
28 செப்2012
00:16
மும்பை:நாட்டின், பங்கு வியாபாரம், வியாழக் கிழமை அன்றும் அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், பல துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை, மிகவும் சரிவடைந்து இருந்தது.சீனா, அதன் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், 1.80 லட்சம் கோடி டாலர் மதிப்பிற்கு, பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக, அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது. ஆனால், இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கவில்லை.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், நுகர்பொருட்கள், பொறியியல், நுகர்வோர் சாதனங்கள் @பான்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.
ஒட்டுமொத்த அளவில், பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 52.67 புள்ளிகள் குறைந்து, 18,579.50 புள்ளிகளில் நிலை கொண்டது.வர்த்தகத்தின் இடையே, "சென்செக்ஸ்' அதிகபட்சமாக, 18,735.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,552.68 புள்ளிகள் வரையிலும் சென்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' வர்த்தகம் முடியும் போது, 13.95 புள்ளிகள் குறைந்து, 5,649.50 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|