வீட்டு வசதி கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புவீட்டு வசதி கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ... நடப்பு கரீப் பருவத்தில்...அரசின் நெல் கொள்முதல் 14 சதவீதம் உயரும் நடப்பு கரீப் பருவத்தில்...அரசின் நெல் கொள்முதல் 14 சதவீதம் உயரும் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
"சென்செக்ஸ்' 53 புள்ளிகள் குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2012
00:16

மும்பை:நாட்டின், பங்கு வியாபாரம், வியாழக் கிழமை அன்றும் அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், பல துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை, மிகவும் சரிவடைந்து இருந்தது.சீனா, அதன் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், 1.80 லட்சம் கோடி டாலர் மதிப்பிற்கு, பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக, அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது. ஆனால், இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கவில்லை.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், நுகர்பொருட்கள், பொறியியல், நுகர்வோர் சாதனங்கள் @பான்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.
ஒட்டுமொத்த அளவில், பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 52.67 புள்ளிகள் குறைந்து, 18,579.50 புள்ளிகளில் நிலை கொண்டது.வர்த்தகத்தின் இடையே, "சென்செக்ஸ்' அதிகபட்சமாக, 18,735.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,552.68 புள்ளிகள் வரையிலும் சென்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' வர்த்தகம் முடியும் போது, 13.95 புள்ளிகள் குறைந்து, 5,649.50 புள்ளிகளில் நிலைபெற்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)