நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 2.1 சதவீதமாக வளர்ச்சிநடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 2.1 சதவீதமாக ... ... வெளிச்சந்தைக்கு 40 லட்சம் டன் சர்க்கரை வெளிச்சந்தைக்கு 40 லட்சம் டன் சர்க்கரை ...
சகாரா குழுமம் முதலீட்டாளர்களுக்கு ரூ.24,000 கோடி வழங்க ஒப்புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2012
00:40

புதுடில்லி:சகாரா குழுமம், அதன் இரண்டு துணை நிறுவனங்கள் மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து, வசூலித்த 24 ஆயிரம் கோடி ரூபாயை, 15 சதவீத வட்டியுடன் மூன்று மாதங்களில் திரும்ப வழங்குவதாக, சுப்ரீம் கோர்ட்டில் உறுதி அளித்துள்ளது.
முறைகேடு:சகாரா குழுமத்தை சேர்ந்த சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன் மற்றும் சகாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனங்கள், விருப்பத்தின் பேரில் முழுவதும் பங்குகளாக மாறக் கூடிய கடன் பத்திரங்களை வெளியிட்டு, 24 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டிக் கொண்டன.இதில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி' தொடர்ந்த வழக்கில், முதலீட்டாளர்களின் விவரங்களை சகாரா நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என, அலகாபாத் கோர்ட் தீர்ப்பளித்தது.இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சென்ற ஆகஸ்ட் 31ம் தேதி, சகாரா நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடம் இருந்து வசூலித்த பணத்தை, 15 சதவீத வட்டியுடன், மூன்று மாதங்களில் திரும்ப அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அவ்வாறு வழங்கத் தவறினால், இரு நிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்கலாம் என்றும், முதலீட்டாளர்கள் குறித்த அனைத்து விவரங்களையும், செப்டம்பர் 10ம் தேதிக்குள் "செபி'யிடம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தது. இந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிட, சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.என். அகர்வாலையும் சுப்ரீம் கோர்ட் நியமித்தது.
கோர்ட் அவமதிப்பு:ஆனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி உரிய ஆவணங்களை வழங்காத சகாரா நிறுவனங்கள் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, "செபி' சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.இந்த மனு, நேற்று, சுப்ரீம் கோர்ட் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது. அப்போது, சகாரா நிறுவனங்கள் சார்பாக ஆஜரான, மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், "முதலீட்டாளர்களிடம் இருந்து வசூலித்த பணத்தை திரும்ப அளித்து விடுகிறோம். பின்வாங்க மாட்டோம். ஆவணங்களை அளிக்க மேலும் கால அவகாசம் வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.இதை ஏற்று, வழக்கு விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு, நீதிபதி ஒத்தி வைத்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)