வெளிச்சந்தைக்கு 40 லட்சம் டன் சர்க்கரைவெளிச்சந்தைக்கு 40 லட்சம் டன் சர்க்கரை ... பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் உயர்வு பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் உயர்வு ...
1ம் தேதிக்கு முன் வாங்கப்பட்ட ரயில் டிக்கெட்டுக்கு சேவை வரி இல்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2012
10:43

புதுடில்லி:ரயில்களில், "ஏசி' வகுப்பு கட்டணங்கள் மற்றும் சரக்கு கட்டணங்களுக்கு, 3.7 சதவீத சேவை வரி விதிப்பு, அக்., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. "இந்த தேதிக்கு முன், ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள டிக்கெட்டுகளுக்கு, பயணத்தின் போது, சேவை வரி வசூலிக்கப்பட மாட்டாது' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில், முதல் வகுப்பு, " ஏசி' வகுப்பு மற்றும் சரக்கு கட்டணங்கள் ஆகியவற்றிற்கு, 3.7 சதவீதம் சேவை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இது, அக்., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, முதல் வகுப்பு, "ஏசி' முதல் வகுப்பு, "ஏசி' இரண்டாம் வகுப்பு , "ஏசி' மூன்றாம் வகுப்பு மற்றும் "ஏசி' சேர் கார் ஆகியவற்றிற்கு இப்போதுள்ள கட்டணத்தில் இருந்து, சேவை வரியாக, 3.7 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டும்.
அக்., 1ம் தேதிக்குப் பின், வரும் நாட்களில் பயணம் செய்வதற்காக, ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகள், சேவை வரியை பயணத்தின் போது, ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் செலுத்த வேண்டும். சேவை வரி அமலுக்கு வந்தபின், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை கேன்சல் செய்யும்போது, சேவை வரி திரும்பத் தரப்பட மாட்டாது என, நேற்று முன்தினம் வெளியான தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதை தெளிவுபடுத்தி, ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது; சேவை வரி, அக்., 1ம் தேதி தான் அமலுக்கு வருகிறது. அன்றிலிருந்து வாங்கப்படும், முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே சேவை வரி வசூலிக்கப்படும். ஏற்கனவே, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு, சேவை வரி வசூலிக்கப்பட மாட்டாது. பயணத்தின் போது, டிக்கெட் பரிசோதகரிடம் செலுத்த வேண்டியதில்லை.
செப்., 30ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு, சேவை வரி வசூலிக்கப்பட மாட்டாது. அதேபோல், சேவை வரி அமலுக்கு வந்தபின், பயணிகளால் ரத்து செய்யப்படும், மேற்கண்ட வகுப்புகளுக்கான டிக்கெட்டுகளுக்கு, சேவை வரி திரும்ப அளிக்கப்படும். சேவை வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது.இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)