நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.2,750 கோடி சரிவுநாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.2,750 கோடி சரிவு ... ஏலக்காய் ஏலம் புறக்கணிப்பு:2.50 லட்சம் கிலோ தேக்கம் ஏலக்காய் ஏலம் புறக்கணிப்பு:2.50 லட்சம் கிலோ தேக்கம் ...
மின் தடையால் ஓசூர் பகுதியிலிருந்து ரோஜா ஏற்றுமதி நிறுத்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2012
05:37

ஓசூர்:ஓசூர் பகுதியில், மின் தடையால், குளிர்பதன கிடங்குகளில் ரோஜா மலர்களை சேமித்து வைக்க முடியாததால், மலர் ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதியை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.பசுமை குடோன்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகாவில் நிலவும் நல்ல மண் வளம், சீதோஷ்ண நிலையை பயன்படுத்தி, விவசாயிகள் அதிகளவு ரோஜா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். 5,000 ஏக்கரில், விவசாயிகள், ரோஜாவை திறந்த வெளி மற்றும் பசுமை குடோன்களில் சாகுபடி செய்துள்ளனர்.
திறந்த வெளியில் உற்பத்தி செய்யும் மலர்களை, உள்ளூர் சந்தைகளுக்கும், பசுமை குடோன்களில் உற்பத்தியாகும் ரோஜா மலர்களை, வெளிநாடுகளுக்கும், விவசாயிகள் ஏற்றுமதி செய்கின்றனர்.ஓசூர் பகுதியில் உற்பத்தியாகும் தாஜ்மகால், கிராண்ட் கலா, பஸ்ட் ரெட், ஒயிட், ரெட், எல்லோ உள்ளிட்ட, 40 வகை ரோஜா மலர்கள், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, துபாய் மற்றும் அரேபியா நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.புத்தாண்டு:குறிப்பாக, காதலர் தினம், அன்னையர் தினம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினங்களில், 50 லட்சம் முதல், ஒரு கோடி வரையிலான மலர்களை, விவசாயிகள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
இந்நிலையில், ஓசூர் பகுதியில், இரண்டு ஆண்டுகளாக பருவ மழை மிகவும் குறைந்துள்ளது.இதனால், நிலத்தடி நீர் மட்டம் வறண்டு, ரோஜா செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டது. ரோஜா செடிகளுக்கு உயர் தொழில்நுட்ப சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் பாசனம் செய்யப்படுகிறது. இதற்கு, மின்சாரம் முக்கிய அத்தியாவசிய தேவையாகிறது. தற்போது, தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் தொடர் மின்தடையால், விவசாயிகள், ரோஜா செடிகளுக்கு சரியான தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை.ஒரு வாரமாக, ஓசூர் தாலுகாவில், தினசரி, 14 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால், குழாய் கிணறுகளில் உள்ள குறைந்தளவு தண்ணீரை கூட, செடிகளுக்கு பாய்ச்ச முடியவில்லை.
செடிகளில் அறுவடை செய்த ஏற்றுமதி ரக மலர்கள் குளிர்பதன கிடங்குகளில் பாதுகாத்து வைக்கப்படுகின்றன. இவற்றை, வாரம் ஒரு முறை, விவசாயிகள் டில்லி, மும்பை, பெங்களூரு, கோல்கட்டா, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட உள்நாட்டு மலர் சந்தைகளுக்கும், வெளிநாட்டு மலர் சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
குளிர்பதன கிடங்கு:தொடர் மின் தடையால், விவசாயிகள், ரோஜா மலர்களை பறித்து, குளிர்பதன கிடங்குகளில் சேமித்து வைக்க முடியவில்லை. தற்போது, விவசாயிகள், தினசரி பறிக்கும் மலர்களை உள்நாட்டு சந்தைகளுக்கு மட்டுமே விற்பனைக்கு அனுப்புகின்றனர். தரமற்ற மலர் மற்றும் விலை வீழ்ச்சியால், விவசாயிகள் மலர் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.தரமற்ற மலர் உற்பத்தியால், 150 ரூபாய்க்கு விற்பனையான, 20 பூக்கள் கொண்ட ஒரு கொத்து, தற்போது, 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)