பதிவு செய்த நாள்
01 அக்2012
05:40
கம்பம்:ஏலக்காய் ஏலத்தில், ஒவ்வொரு முறையும் கிலோவிற்கு 50 காசு உயர்த்தி கேட்பதை தவிர்த்து, ஐந்து ரூபாயாக உயர்த்தி கேட்க வேண்டும் என, நறுமணப் பொருட்கள் வாரியம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.இதனால், ஏலக்காய் வர்த்தகம் நிலைகுலைந்து உள்ளது. ஏலத்தை வியாபாரிகள் தொடர்ந்து புறக்கணிப்பதால், இதுவரை 2.50 லட்சம் கிலோ ஏலக்காய் தேங்கியுள்ளது.கம்பமெட்டு அருகில் உள்ள கேரள மாநிலம் புத்தடியில் ஏலக்காய் ஏலம் நடந்து வருகிறது. செப்., 26 முதல், ஏலத்தில் கலந்து கொண்டு கொள்முதல் செய்யும் வியாபாரிகள், ஏலம் கேட்கும் போது ஒவ்வொரு முறையும், 50 காசு என்று உயர்த்தி கேட்பதை விட்டு, 5 ரூபாயாக உயர்த்தி கேட்க வேண்டும் என, நறுமணப் பொருட்கள் வாரியம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ஏற்க மறுத்த வியாபாரிகள், வர்த்தகத்தை புறக்கணிப்பதாக கூறி, உடனடியாக ஏல மையத்தில் இருந்து வெளியேறினர். அன்று முதல் நான்கு நாட்களாக தொடர்ந்து ஏலத்தை புறக்கணித்ததால், 2.50 லட்சம் கிலோ ஏலக்காய் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது.உத்தரவு பிறப்பித்த நறுமணப் பொருட்கள் வாரிய தலைவர் ராஜ்திலக், வெளிநாடு சென்று விட்டார். அவரது அனுமதி இன்றி வேறு யாரும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. இதனால் இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது.இந்நிலையில், வியாபாரிகள் தொடர்ந்து ஏலத்தை புறக்கணித்து வருகின்றனர். இதனால், நாள் ஒன்றுக்கு சராசரியாக மார்க்கெட்டிற்கு வரும் 60 ஆயிரம் கிலோ ஏலக்காய் தேங்கி கிடக்கிறது. இது, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|