மின் தடையால் ஓசூர் பகுதியிலிருந்து ரோஜா ஏற்றுமதி நிறுத்தம்மின் தடையால் ஓசூர் பகுதியிலிருந்து ரோஜா ஏற்றுமதி நிறுத்தம் ... ஆலிவ் எண்ணெய் பயன்பாடு:10 ஆயிரம் டன்னாக உயரும் ஆலிவ் எண்ணெய் பயன்பாடு:10 ஆயிரம் டன்னாக உயரும் ...
ஏலக்காய் ஏலம் புறக்கணிப்பு:2.50 லட்சம் கிலோ தேக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2012
05:40

கம்பம்:ஏலக்காய் ஏலத்தில், ஒவ்வொரு முறையும் கிலோவிற்கு 50 காசு உயர்த்தி கேட்பதை தவிர்த்து, ஐந்து ரூபாயாக உயர்த்தி கேட்க வேண்டும் என, நறுமணப் பொருட்கள் வாரியம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.இதனால், ஏலக்காய் வர்த்தகம் நிலைகுலைந்து உள்ளது. ஏலத்தை வியாபாரிகள் தொடர்ந்து புறக்கணிப்பதால், இதுவரை 2.50 லட்சம் கிலோ ஏலக்காய் தேங்கியுள்ளது.கம்பமெட்டு அருகில் உள்ள கேரள மாநிலம் புத்தடியில் ஏலக்காய் ஏலம் நடந்து வருகிறது. செப்., 26 முதல், ஏலத்தில் கலந்து கொண்டு கொள்முதல் செய்யும் வியாபாரிகள், ஏலம் கேட்கும் போது ஒவ்வொரு முறையும், 50 காசு என்று உயர்த்தி கேட்பதை விட்டு, 5 ரூபாயாக உயர்த்தி கேட்க வேண்டும் என, நறுமணப் பொருட்கள் வாரியம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ஏற்க மறுத்த வியாபாரிகள், வர்த்தகத்தை புறக்கணிப்பதாக கூறி, உடனடியாக ஏல மையத்தில் இருந்து வெளியேறினர். அன்று முதல் நான்கு நாட்களாக தொடர்ந்து ஏலத்தை புறக்கணித்ததால், 2.50 லட்சம் கிலோ ஏலக்காய் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது.உத்தரவு பிறப்பித்த நறுமணப் பொருட்கள் வாரிய தலைவர் ராஜ்திலக், வெளிநாடு சென்று விட்டார். அவரது அனுமதி இன்றி வேறு யாரும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. இதனால் இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது.இந்நிலையில், வியாபாரிகள் தொடர்ந்து ஏலத்தை புறக்கணித்து வருகின்றனர். இதனால், நாள் ஒன்றுக்கு சராசரியாக மார்க்கெட்டிற்கு வரும் 60 ஆயிரம் கிலோ ஏலக்காய் தேங்கி கிடக்கிறது. இது, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)