பதிவு செய்த நாள்
01 அக்2012
05:42
புதுடில்லி:சூரிய சக்தி வாயிலான மின் உற்பத்தியை, வரும் 2022ம் ஆண்டிற்குள் 20 மடங்கு உயர்த்தி, 20 ஜிகா வாட்டாக அதிகரிக்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.இதன் மூலம், சராசரியாக 9 சதவீத மின் பற்றாக்குறையால், ஓராண்டில் ஏற்படும் 1.2 சதவீத பொருளாதார வளர்ச்சியின் பாதிப்பு தடுக்கப்படும் என, மதிப்பிடப்பட்டுஉள்ளது.கடுமையான மின் பற்றாக்குறையால் தவித்து வரும் இந்தியாவில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், சூரியசக்தி மூலம் மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தி திட்டங்களில் ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகின்றன.
இந்தியாவில் இத்துறைக்கு உள்ள வளர்ச்சி வாய்ப்பை கருத்தில் கொண்டு, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல நிறுவனங்கள், இந்தியாவை சேர்ந்த சூரிய மின்சக்தி நிறுவனங்களுடன் கூட்டு மேற்கொண்டுள்ளன.ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில், சூரிய மின் உற்பத்திக்கான "பேனல்' உள்ளிட்ட சாதனங்களின் தயாரிப்புக்கு, மானியம் வழங்கப்படுகிறது. இதனால், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல நிறுவனங்கள், இந்தியாவில் அவற்றின் தயாரிப்புகளை அதிக அளவில் சந்தைப்படுத்தி வருகின்றன. இத்துடன், இந்தியாவில், சூரியசக்தி வாயிலான மின் உற்பத்தி சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் பங்கு முதலீடு செய்து வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|