பதிவு செய்த நாள்
01 அக்2012
05:43
புதுடில்லி:இந்தியாவின், வெளி நாட்டு கடன், நடப்பாண்டில், ஜூன் மாதம் வரையிலுமாக, 34,950 கோடி டாலராக (19.22 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இது, நடப்பாண்டின், மார்ச் மாதத்தை விட, 1.1 சதவீதம் அல்லது 390 கோடி டாலர் (21,450 கோடி ரூபாய்) அதிகமாகும்.
கணக்கீட்டு காலாண்டில், நாட்டின், அன்னிய கடன் உயர்விற்கு, வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,), ரூபாய் மதிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளும் டெபாசிட் அதிகரிப்பே முக்கிய காரணம். கடந்த ஆண்டின், டிசம்பர் மாதத்தில், வெளி நாடு வாழ் இந்தியர்கள், மேற்கொள்ளும் டெபாசிட் மீது, இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இதையடுத்து, என்.ஆர்.ஐ.,கள் மேற்கொள்ளும், வங்கி டெபாசிட்டு மிகவும் அதிகரித்து வருகிறது.
ஜூன் வரையிலான காலாண்டில், பெறப்பட்ட மொத்த வெளிநாட்டு அன்னிய கடனில், நீண்ட கால அடிப்படையில் பெறப்பட்ட கடன், 26,910 கோடி டாலராகவும், குறைந்த கால அடிப்படையில் பெறப்பட்ட கடன், 8,050 கோடி டாலராகவும் உள்ளது.
இந்தியாவின், மொத்த வெளி நாட்டு கடனில், வெளிநாட்டு வர்த்தக கடன், 30 சதவீதம் என்ற அளவிலும், என்.ஆர்.ஐ., டெபாசிட்டு, 17.4 சதவீதம் என்ற அளவிலும், பன்முக கடன், 14.2 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது என, ரிசர்வ் வங்கி, வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|