பதிவு செய்த நாள்
01 அக்2012
05:46
புதுடில்லி:காலம் தவறிய மழைப் பொழிவால், நடப்பு கரீப் பருவத்தில், நாட்டின், பல மாநிலங்களில், வேளாண் உற்பத்தி சுணக்கம் கண்டுள்ளது.
இந்நிலையில், உர விற்பனை குறைந்துள்ளதாலும், கையிருப்பு அதிகமாக இருப்பதாலும், உர வகைகள் இறக்குமதி, நடப்பு நிதியாண்டில் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கையிருப்பு:டை - அமோனியம் பாஸ்பேட் (டீ.ஏ.பி.,) மற்றும் முரேட் ஆப் பொட்டாஷ் (எம்.ஓ.பி.) ஆகிய உரங்கள் அதிகளவில் கையிருப்பில் உள்ளன. இவை, வரும் ரபி பருவம் (அக்.,-மார்ச்) வரை போதுமானதாகும்.நம் நாடு, எம்.ஓ.பி., (100 சதவீதம்) மற்றும் டி.ஏ.பி., (90 சதவீதம்) ஆகிய உரங்களை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கிறது.
இந்நிலையில், உரங்களின் விலை, மிகவும் அதிகரித்துள்ளதால், விவசாயிகள், ரசாயன உர பயன்பாட்டை குறைத்துள்ளனர். மேற்கண்ட உரங்களுக்கு பதிலாக, குறைந்த விலையில் கிடைக்கும் யூரியா அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுவும், டீ.ஏ.பி., மற்றும் எம்.ஓ.பி., உர வகைகள் விற்பனையை பாதித்துள்ளது என, இந்திய உர கூட்டமைப்பின் தலைவர் ஏ.வெள்ளையன் தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டில், எம்.ஓ.பி., இறக்குமதி, 25-30 லட்சம் டன்னாகவும், டீ.ஏ.பி., உர இறக்குமதி, 50 லட்சம் டன் என்ற அளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், கடந்த ஆண்டின் இவற்றின் இறக்குமதி முறையே, 26.80 லட்சம் டன் மற்றும் 42.40 லட்சம் டன் என்ற அளவிலும், இது, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 45 லட்சம் டன் மற்றும் 74 லட்சம் டன் என்ற அளவிலும் இருந்தது.
விற்பனை:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், யூரியா விற்பனை, 3 சதவீத அளவிற்கும், டீ.ஏ.பி., 29 சதவீத அளவிற்கும் குறைந்துள்ளது. சென்ற ஆகஸ்ட் வரையிலுமாக, 8.35 லட்சம் டன் டீ.ஏ.பி.,யும், 6.83 லட்சம் டன் என்.பி.கே., உர வகைகளும் கையிருப்பில் உள்ளதாக, உரத் துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|