பதிவு செய்த நாள்
02 அக்2012
00:14
புதுடில்லி:ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், முகவர்கள் மற்றும் காப்பீட்டுதாரர்களை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு சலுகை திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.அவற்றின் விவரம் வருமாறு:ஆயுள் காப்பீட்டு துறையில், முதலாண்டு பிரிமியம் மற்றும் ஒரே பிரிமியம் கொண்ட காப்பீட்டு திட்டங்களுக்கு, சேவை வரியில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
சேவை வரி விலக்கு:சமூக பாதுகாப்பு காப்பீட்டு திட்டங்களுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
ஒரு சில ஓய்வூதிய காப்பீட்டு திட்டங்களுக்கு, வருமான வரிச் சட்டம், பிரிவு 80-ன் கீழ் ஒரு லட்ச ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைக்கு, பிரத்யேக பிரிவில் வரி விலக்கு அளிப்பது குறித்து வருவாய் துறை பரிசீலிக்கும்.ஆயுள் காப்பீட்டு முகவர்களின் தரகுத் தொகைக்கு, மூல வரி பிடித்தம் செய்வதற்கான வரம்பை, 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் பரிசீலிக்கும்.
அனுமதி:ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், சில நிபந்தனைகளின் பேரில், காப்பீட்டு திட்டங்களை, இரிடா-வின் அனுமதிக்கு முன்பாகவே அறிமுகப்படுத்தலாம்.
எளிமையான, சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய காப்பீட்டு திட்டங்களின் அறிமுகத்திற்கு தனி நடைமுறையை உருவாக்குவது குறித்து, காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (இரிடா) பரிசீலிக்க வேண்டும்.
வங்கிகளும், முகவர்கள் போன்று, ஆயுள் காப்பீட்டு திட்டங்களை வினியோகிக்கலாம்.அனைத்து வங்கி பணியாளர்களும், குறுங் காப்பீட்டு திட்டங்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.ஆயுள் காப்பீட்டு துறையில் முதலீட்டு வரம்புகளை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற சலுகைகள், பொது காப்பீட்டு துறைக்கும் வழங்கப்படும். இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|