பதிவு செய்த நாள்
02 அக்2012
00:15
சென்னை:மத்திய அரசு, சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்காக, 'ஜனஸ்ரீ பீமா யோஜனா' (ஜே.பீ.ஒய்) மற்றும் 'ஆம் ஆத்மி பீமா யோஜனா' (ஏ.ஏ.பீ.ஒய்) என்ற, இரு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இவ்விரு திட்டங்களையும் எல்.ஐ.சி., நிறுவனம் நிர்வகித்து வருகிறது.எனவே, எல்.ஐ.சி., நிறுவனம், நடப்பு அக்டோபர் மாதம் முழுவதையும், சமுதாய பாதுகாப்பு மாதமாக கொண்டாடுகிறது.
கிராம மற்றும் நகர்ப் புறங்களில், வறுமை கோட்டிற்கு கீழ் மற்றும் சற்று மேல் உள்ள மக்களுக்கான, 'ஜனஸ்ரீ பீமா யோஜனா' என்ற காப்பீட்டு திட்டத்தை எல்.ஐ.சி., நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இத்திட்டத்தில், 18-59 வயதுக்கு உட்பட்டவர்கள் காப்பீட்டு வசதியை பெறலாம். சென்ற மார்ச் மாத நிலவரப்படி, 2.21 கோடி பேர் இத்திட்டத்தின் வாயிலாக காப்பீட்டு வசதியை பெற்றுள்ளனர்.
மேலும், ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் (ஐ.டி.ஐ., படிப்பு உட்பட) மாணவர்கள் கல்வி உதவித் தொகையையும் பெறலாம். இதன்படி, கடந்த 2011-12ம் நிதியாண்டில், 20.90 லட்சம் மாணவர்களுக்கு, 180.25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.கிராமப்புற நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கான, 'ஆம் ஆத்மி பீமா யோஜனா' என்ற திட்டத்தை எல்.ஐ.சி., நிர்வகித்து வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, கடந்த நிதியாண்டில், 4.45 லட்சம் மாணவர்களுக்கு, 47.25 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.சென்ற மார்ச் மாத நிலவரப்படி, 4.79 கோடி குடும்பங்கள், அனைத்து சமுதாய பாதுகாப்பு திட்டங்களில் இணைந்துள்ளன என, எல்.ஐ.சி., நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|