ஆயுள் காப்பீட்டு துறைக்கு சலுகைகள்:ப.சிதம்பரம் அறிவிப்புஆயுள் காப்பீட்டு துறைக்கு சலுகைகள்:ப.சிதம்பரம் அறிவிப்பு ... ஆபரண தங்கம்: சவரனுக்கு ரூ.256  சரிவு ஆபரண தங்கம்: சவரனுக்கு ரூ.256 சரிவு ...
எல்.ஐ.சி., நிறுவனம் சமூக காப்பீட்டு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2012
00:15

சென்னை:மத்திய அரசு, சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்காக, 'ஜனஸ்ரீ பீமா யோஜனா' (ஜே.பீ.ஒய்) மற்றும் 'ஆம் ஆத்மி பீமா யோஜனா' (ஏ.ஏ.பீ.ஒய்) என்ற, இரு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இவ்விரு திட்டங்களையும் எல்.ஐ.சி., நிறுவனம் நிர்வகித்து வருகிறது.எனவே, எல்.ஐ.சி., நிறுவனம், நடப்பு அக்டோபர் மாதம் முழுவதையும், சமுதாய பாதுகாப்பு மாதமாக கொண்டாடுகிறது.
கிராம மற்றும் நகர்ப் புறங்களில், வறுமை கோட்டிற்கு கீழ் மற்றும் சற்று மேல் உள்ள மக்களுக்கான, 'ஜனஸ்ரீ பீமா யோஜனா' என்ற காப்பீட்டு திட்டத்தை எல்.ஐ.சி., நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இத்திட்டத்தில், 18-59 வயதுக்கு உட்பட்டவர்கள் காப்பீட்டு வசதியை பெறலாம். சென்ற மார்ச் மாத நிலவரப்படி, 2.21 கோடி பேர் இத்திட்டத்தின் வாயிலாக காப்பீட்டு வசதியை பெற்றுள்ளனர்.
மேலும், ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் (ஐ.டி.ஐ., படிப்பு உட்பட) மாணவர்கள் கல்வி உதவித் தொகையையும் பெறலாம். இதன்படி, கடந்த 2011-12ம் நிதியாண்டில், 20.90 லட்சம் மாணவர்களுக்கு, 180.25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.கிராமப்புற நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கான, 'ஆம் ஆத்மி பீமா யோஜனா' என்ற திட்டத்தை எல்.ஐ.சி., நிர்வகித்து வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, கடந்த நிதியாண்டில், 4.45 லட்சம் மாணவர்களுக்கு, 47.25 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.சென்ற மார்ச் மாத நிலவரப்படி, 4.79 கோடி குடும்பங்கள், அனைத்து சமுதாய பாதுகாப்பு திட்டங்களில் இணைந்துள்ளன என, எல்.ஐ.சி., நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)