பதிவு செய்த நாள்
02 அக்2012
00:27
புதுடில்லி:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 2,230 கோடி டாலராக (1.22 லட்சம் கோடி ரூபாய்) குறைந்து உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின், இதே மாதத்தை விட, 9.74 சதவீதம் குறைவாகும், என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துஉள்ளது.பொருளாதார மந்தநிலை:சர்வதேச பொருளாதார மந்த நிலையால், பல நாடுகள் குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், சர்வதேச வர்த்தகம் சுணக்கம் கண்டுள்ளது. இதனால், இந் தியாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் மந்த நிலை காணப்படுகிறது.
மதிப்பீட்டு காலத்தில், நாட்டின் இறக்குமதி, 5.08 சதவீதம் சரிவுஅடைந்து, 3,790 கோடி டாலராக (2.18 லட்சம் கோடி ரூபாய்) குறைந்து உள்ளது. வர்த்தக பற்றாக்குறை:ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அதிகரித்துள்ளதால், வர்த்தக பற்றாக்குறை, 1,560 கோடி டாலர் (85,800 கோடி ரூபாய்) என்ற அளவில் உயர்ந்துள்ளது.சென்ற ஆகஸ்ட் மாதத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதி, 2.96 சதவீதம் உயர்ந்து, 1,251 கோடி டாலராக அதிகரித்துள்ளது. அதேசமயம், இதர பொருட்களின் இறக்குமதி, 8.74 சதவீதம் சரிவடைந்து, 2.51 கோடி டாலராக என்ற அளவில் குறைந்துள்ளது.
ஏற்றுமதி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான, ஐந்து மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, 11,997 கோடி டாலராக (6.59 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, (12,750 கோடி டாலர்/ 6.59 லட்சம் கோடி ரூபாய்) 5.96 சதவீதம் குறைவாகும்.கணக்கீட்டு காலத்தில், இறக்குமதி, 6.2 சதவீதம் குறைந்து, 19,110 கோடி டாலராக (10.51 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|