நாட்டின் ஏற்றுமதி ரூ.1.22 லட்சம் கோடிநாட்டின் ஏற்றுமதி ரூ.1.22 லட்சம் கோடி ... ரயில்களில் "ஏசி' வகுப்புகட்டணங்கள் உயர்ந்தது ரயில்களில் "ஏசி' வகுப்புகட்டணங்கள் உயர்ந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
'சென்செக்ஸ்' 61 புள்ளிகள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2012
00:28

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கட்கிழமைஅன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. பல நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு மேற்கொண்டதை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ஏற்றத்துடன் முடி வடைந்தது.சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளுக்கு, அக்டோபர் 7ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், பங்கு வர்த்தகம் நடைபெற்ற இதர ஆசிய நாடுகளில், பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை இருந்தது. இருப்பினும், வங்கி, எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 61.17 புள்ளிகள் அதிகரித்து, 18,823.91 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 18,838.54 புள்ளிகள் வரையிலும், 18,745.28 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், இன்போசிஸ், டாட்டா மோட்டார்ஸ், ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட 16 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், பஜாஜ் ஆட்டோ, டாட்டா பவர், எச்.டீ.எப்.சி. பேங்க் உள்ளிட்ட 14 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 15.50 புள்ளிகள் உயர்ந்து, 5,718.80 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,722.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,694 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)