பதிவு செய்த நாள்
02 அக்2012
00:28
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கட்கிழமைஅன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. பல நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு மேற்கொண்டதை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ஏற்றத்துடன் முடி வடைந்தது.சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளுக்கு, அக்டோபர் 7ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், பங்கு வர்த்தகம் நடைபெற்ற இதர ஆசிய நாடுகளில், பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை இருந்தது. இருப்பினும், வங்கி, எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 61.17 புள்ளிகள் அதிகரித்து, 18,823.91 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 18,838.54 புள்ளிகள் வரையிலும், 18,745.28 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், இன்போசிஸ், டாட்டா மோட்டார்ஸ், ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட 16 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், பஜாஜ் ஆட்டோ, டாட்டா பவர், எச்.டீ.எப்.சி. பேங்க் உள்ளிட்ட 14 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 15.50 புள்ளிகள் உயர்ந்து, 5,718.80 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,722.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,694 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|