பதிவு செய்த நாள்
02 அக்2012
11:01
மதுரை;ரயில்களில், "ஏசி' வகுப்பு கட்டணங்கள், சரக்கு கட்டணங்களுக்கு விதிக்கப்பட்ட, 3.7 சதவீத சேவை வரி காரணமாக கட்டணங்கள் உயர்ந்தன."ஏசி' முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு, "ஏசி' சேர்கார், வகுப்பு டிக்கட் கட்டணத்துடன், நேற்று முதல் 3.7 சதவீத சேவை வரி கூடுதலாக சேர்த்து வசூலிக்கப்பட்டது. இதனால் மதுரை-சென்னை ரயில்களில் "ஏசி' முதல் வகுப்பு கட்டணம் 56 ரூபாய் உயர்ந்து, 1560 ரூபாய் வசூலிக்கப்பட்டது. "ஏசி' இரண்டாம் வகுப்பு 33 ரூபாய் உயர்ந்து, 760 ரூபாய், "ஏசி' மூன்றாம் வகுப்பு 22 ரூபாய் உயர்ந்து,6 ரூபாய் வசூலிக்கப்பட்டது. "ஏசி' சேர் கார் கட்டணம் ரூ.17 உயர்ந்து, 488 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதுபோல சரக்கு கட்டணங்களும் 3.7 சதவீதம் உயர்ந்தன.பயணிகள் கூறியதாவது: மத்திய அரசு ரயில் கட்டணங்களை உயர்த்தினால், மக்கள் அதிருப்தியை சம்பாதிக்க கூடும் என அறிவிப்பதில்லை. ஆனால் மறைமுகமாக இப்படி கட்டணங்களை உயர்த்துகிறது. சேவை வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும், என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|