பதிவு செய்த நாள்
02 அக்2012
14:50
புதுடில்லி: கடந்த பத்து ஆண்டுகளில், முதல் முறையாக சென்ற ஆகஸ்ட் மாதம் மொபைல் போன் சந்தாதாரர் எண்ணிக்கை சரிந்துள்ளது. பார்தி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா மொபைல் சேவை நிறுவனங்களின் சந்தாதாரர்கள் தங்களிடம் இருந்த இணைப்பை திரும்ப அளித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பினைக் கொண்டிருந்தவர்கள். மொபைல் சேவை நிறுவனங்கள் வழக்கமாக வழங்கி வந்த, பல சலுகைகளையும், இலவச வசதிகளையும் ஆகஸ்ட் மாதம் நிறுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால், பல வாடிக்கையாளர்கள், தங்கள் இணைப்பை புதுப்பிக்காமல் இருந்து வருகின்றனர். மேலே கூறப்பட்ட மூன்று நிறுவனங்களில், இந்திய மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் 67% பேரைக் கொண்டுள்ளனர். ஜூன் மாதத்தில் 44.2 லட்சம், ஜூலையில் 31.6 லட்சம் என்ற அளவில் புதிய சந்தாதாரர்களாக இந்த நிறுவனங்கள் மேற்கொண்டன. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் இந்த நிலை மாறியுள்ளது. சரியான சந்தாதாரர் எண்ணிக்கையினை இன்னும் ட்ராய் வெளியிடவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|