பதிவு செய்த நாள்
05 அக்2012
01:09
பெங்களூரு:இந்தியாவில், குடியிருப்புகள் மற்றும் வர்த்தக வளாகங்களை உள்ளடக்கிய ரியல் எஸ்டேட் துறையில், தனியார் பங்கு முதலீடு குறைந்துள்ளதாக, ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.நடப்பு 2012ம் ஆண்டின், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், ரியல் எஸ்டேட் துறை சார்ந்த, 23 ஒப்பந்தங்கள் வாயிலாக தனியார் பங்கு முதலீடு, 3,480 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே காலத்தை விட, (4,110 கோடி ரூபாய்) 15 சதவீதம் குறைவாகும்.
ரியல் எஸ்டேட் துறையில், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், 2,100 கோடி ரூபாயும், அடுத்த இரண்டு காலாண்டுகளில், 1,380 கோடி ரூபாயும், தனியார் பங்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.அரசின் சர்ச்சைக்குரிய கொள்கைகள், முதலீடுகள் குறித்த நிச்சயமற்ற நிலை போன்ற காரணங்களால் தான், ரியல் எஸ்டேட் துறையில் தனியார் பங்கு முதலீடு குறைந்துள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|