பதிவு செய்த நாள்
05 அக்2012
01:10
அண்மையில் முடிவுற்ற 2011-12ம் பருத்தி பருவத்தில், நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.35 கோடி பொதிகளாக அதிகரித்திருக்கும் என, மத்திய வேளாண் அமைச்சகத்தின் தற்போதைய அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, முன்னர் 3.34 @காடி பொதிகள் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
மதிப்பீடு:பருத்தி பருவம் என்பது, அக்டோபரில் துவங்கி, செப்டம்பர் வரையில் கணக்கிடப்படு கிறது.கடந்த ஆகஸ்ட் மாதம், பருத்தி ஆலோசனை கழகம் (சி.ஏ.பீ.,) அதன் முன்கூட்டிய மதிப் பீட்டை வெளியிட்டது. அதில், 2010-11ம் பருவத்தை விட, சென்ற 2011-12ம் பருவத்தில், பருத்தி உற்பத்தி, 9 சதவீதம் அதிகரித்து, 3.55 கோடி பொதிகளாக உயரும் என, தெரிவிக்கப் பட்டிருந்தது.
சென்ற பருத்தி பருவத்தில், ஐந்து லட்சம் பருத்தி பொதிகள் இறக்குமதி செய்யப் பட்டுள்ளன. கையிருப்பில், 47.50 லட்சம் பொதிகள் இருந்தன. இவற்றுடன், சி.ஏ.பீ.,-ன் உற்பத்தி மதிப்பீட்டை சேர்த்தால், பயன்பாட்டிற்கான பருத்தி, 4.07 கோடி பொதிகளாக இருக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.அதேசமயம், பருத்திக்கான தேவை, 3.51 கோடி பொதிகள் என்ற அளவில் தான் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை, 1.30 கோடி பருத்தி பொதிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.உள்நாட்டில், பருத்தியின் விலை உயர்ந்ததை அடுத்து, ஜூன்-ஜூலை மாதம் முதற்கொண்டு, பருத்தி இறக்குமதி மேற் கொள்ளப்பட்டது. இதுவரை, 10 முதல் 12 லட்சம் பருத்தி பொதிகள் வரை இறக்குமதி செய்ய ஒப் பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சாகுபடி:சி.ஏ.பீ.,-ன் முதல் முன்கூட்டிய மதிப்பீட்டில், 115-116 லட்சம் ஹெக்டேரில் பருத்தி சாகு படி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.கடந்த 2010-11ம் பருவத்தில், நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.30 @காடி பொதிகளாக இருந்தன. பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில், பருத்தி சாகுபடி பரப்பளவு, முந்தைய பருவத்தை விட, 7 சதவீதம் குறைந்து, 13.57 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.
அதேசமயம், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களில், இதன் சாகுபடி பரப்பளவு, 7 சதவீதம் அதிகரித்து, 72.15 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.இதேபோன்று, ஆந்திரா, கர் நாட கம் மற்றும் தமிழகம் (தென் மண்டலம்) ஆகிய மாநிலங்களில், இதன் சாகுபடி பரப்பளவு, 20.50 சதவீதம் உயர்ந்து, 24.51 லட்சம் ஹெக்டேராக மிகவும் அதிகரித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள்:நாட்டின், வடக்கு பகுதிகளில், பருத்தி உற்பத்தி, 3 சதவீதம் குறைந்து, 39 லட்சம் பொதிகளாக உள்ளது. மத்திய பகுதிகளில், இதன் உற்பத்தி, 5 சதவீதம் குறைந்து, 68 லட்சம் பொதிகளாக இருந்தது.ஒடிசா மற்றும் இதர மாநிலங்களில், இதன் உற்பத்தி, இரண்டு மடங்கு அதிகரித்து, தலா இரண்டு லட்சம் பொதிகளாக இருந்தன. இதர பகுதிகளில், எஞ்சிய பருத்தி உற் பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|