ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின்பிரிமியம் வருவாய் ரூ.39,358 கோடிஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின்பிரிமியம் வருவாய் ரூ.39,358 கோடி ... முட்டை விலை வீழ்ச்சி முட்டை விலை வீழ்ச்சி ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
2011-12ம் பருவ மதிப்பீடு...பருத்தி உற்பத்தி 3.35 கோடி பொதிகளாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2012
01:10

அண்மையில் முடிவுற்ற 2011-12ம் பருத்தி பருவத்தில், நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.35 கோடி பொதிகளாக அதிகரித்திருக்கும் என, மத்திய வேளாண் அமைச்சகத்தின் தற்போதைய அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, முன்னர் 3.34 @காடி பொதிகள் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
மதிப்பீடு:பருத்தி பருவம் என்பது, அக்டோபரில் துவங்கி, செப்டம்பர் வரையில் கணக்கிடப்படு கிறது.கடந்த ஆகஸ்ட் மாதம், பருத்தி ஆலோசனை கழகம் (சி.ஏ.பீ.,) அதன் முன்கூட்டிய மதிப் பீட்டை வெளியிட்டது. அதில், 2010-11ம் பருவத்தை விட, சென்ற 2011-12ம் பருவத்தில், பருத்தி உற்பத்தி, 9 சதவீதம் அதிகரித்து, 3.55 கோடி பொதிகளாக உயரும் என, தெரிவிக்கப் பட்டிருந்தது.
சென்ற பருத்தி பருவத்தில், ஐந்து லட்சம் பருத்தி பொதிகள் இறக்குமதி செய்யப் பட்டுள்ளன. கையிருப்பில், 47.50 லட்சம் பொதிகள் இருந்தன. இவற்றுடன், சி.ஏ.பீ.,-ன் உற்பத்தி மதிப்பீட்டை சேர்த்தால், பயன்பாட்டிற்கான பருத்தி, 4.07 கோடி பொதிகளாக இருக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.அதேசமயம், பருத்திக்கான தேவை, 3.51 கோடி பொதிகள் என்ற அளவில் தான் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை, 1.30 கோடி பருத்தி பொதிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.உள்நாட்டில், பருத்தியின் விலை உயர்ந்ததை அடுத்து, ஜூன்-ஜூலை மாதம் முதற்கொண்டு, பருத்தி இறக்குமதி மேற் கொள்ளப்பட்டது. இதுவரை, 10 முதல் 12 லட்சம் பருத்தி பொதிகள் வரை இறக்குமதி செய்ய ஒப் பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சாகுபடி:சி.ஏ.பீ.,-ன் முதல் முன்கூட்டிய மதிப்பீட்டில், 115-116 லட்சம் ஹெக்டேரில் பருத்தி சாகு படி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.கடந்த 2010-11ம் பருவத்தில், நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.30 @காடி பொதிகளாக இருந்தன. பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில், பருத்தி சாகுபடி பரப்பளவு, முந்தைய பருவத்தை விட, 7 சதவீதம் குறைந்து, 13.57 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.
அதேசமயம், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களில், இதன் சாகுபடி பரப்பளவு, 7 சதவீதம் அதிகரித்து, 72.15 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.இதேபோன்று, ஆந்திரா, கர் நாட கம் மற்றும் தமிழகம் (தென் மண்டலம்) ஆகிய மாநிலங்களில், இதன் சாகுபடி பரப்பளவு, 20.50 சதவீதம் உயர்ந்து, 24.51 லட்சம் ஹெக்டேராக மிகவும் அதிகரித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள்:நாட்டின், வடக்கு பகுதிகளில், பருத்தி உற்பத்தி, 3 சதவீதம் குறைந்து, 39 லட்சம் பொதிகளாக உள்ளது. மத்திய பகுதிகளில், இதன் உற்பத்தி, 5 சதவீதம் குறைந்து, 68 லட்சம் பொதிகளாக இருந்தது.ஒடிசா மற்றும் இதர மாநிலங்களில், இதன் உற்பத்தி, இரண்டு மடங்கு அதிகரித்து, தலா இரண்டு லட்சம் பொதிகளாக இருந்தன. இதர பகுதிகளில், எஞ்சிய பருத்தி உற் பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)