பதிவு செய்த நாள்
06 அக்2012
00:25
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 5,497 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (4,827 கோடி ரூபாய்) விட, 14 சதவீதம் அதிகம் என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் தெரிவித்துள்ளது.கணக்கீட்டு காலத்தில், டாலர் மதிப்பின் அடிப்படையிலான, ஆயத்த ஆடை ஏற்றுமதி, 7.2 சதவீதம் குறைந்து, 106 கோடி டாலரிலிருந்து, 99 கோடி டாலராக குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான, முதல் ஐந்து மாத காலத்தில், ரூபாய் மதிப்பின் அடிப்படையிலான இதன் ஏற்றுமதி, 7.32 சதவீதம் உயர்ந்து, 26,800 கோடி ரூபாயிலிருந்து, 28,761 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.அதேசமயம், டாலர் மதிப்பின் அடிப்படையிலான ஆயத்த ஆடை ஏற்றுமதி, 12.16 சதவீதம் குறைந்து, 598 கோடி டாலரிலிருந்து, 526 கோடி டாலராக குறைந்துள்ளது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|