தங்கம், வைர ஆபரணங்கள் விற்பனை மந்தம்:சலுகை திட்டங்கள் கைகொடுக்குமா? தங்கம், வைர ஆபரணங்கள் விற்பனை மந்தம்:சலுகை திட்டங்கள் கைகொடுக்குமா? ... தேசிய பங்கு சந்தையின் "நிப்டி' திடீர் வீழ்ச்சி:மூன்று நிமிடத்தில் முதலீட்டாளர்களுக்கு பல கோடி இழப்பு? தேசிய பங்கு சந்தையின் "நிப்டி' திடீர் வீழ்ச்சி:மூன்று நிமிடத்தில் ... ...
அயல்நாட்டு சுற்றுலா பயணிகளால்அதிகரிக்கும் அன்னிய செலாவணி வருவாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2012
00:38

புதுடில்லி:பல்வேறு நாடுகளிலிருந்து, இந்தியாவிற்கு வரும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, நாட்டின், அன்னிய செலாவணி வருவாய் பன்மடங்கு உயர்ந்துள்ளது.நடப்பாண்டு, செப்டம்பர் மாதத்தில், இந்தியா வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 4.15 லட்சம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.

நடவடிக்கை:இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில் வந்த பயணிகளின் எண்ணிக்கையை (4.02 லட்சம்) விட, 3.2 சதவீதம் அதிகமாகும்.கடந்த 2010ம் ஆண்டின், செப்டம்பர் மாதத்தில், இந்தியா வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 8.7 சதவீதம் உயர்ந்து, 3.70 லட்சமாக இருந்தது. நடப்பாண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், இந்தியா வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 46.33 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட, (43.75 லட்சம் பேர்) 5.9 சதவீதம் அதிகமாகும். மத்திய, மாநில அரசுகள், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தாஜ்மகால்:இந்தியாவில், தாஜ்மகால், ஜெய்ப்பூர் பேலஸ், கோவா கடற்கரை, இமயமலை, அஜந்தா எல்லோரா குகை ஓவியங்கள், டார்ஜிலிங், ஊட்டி, மைசூர் அரண்மனை, ஹூமாயூன் நினைவிடம் உள்ளிட்டவை முக்கிய சுற்றுலா மையங்களாக திகழ்கின்றன.மேலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, மருத்துவத்திற்கான செலவு குறைவாக உள்ளது. இதனால், அயல்நாடுகளில் இருந்து, இந்தியாவிற்கு, மருத்துவ சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மும்பையில், பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா வரும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.தற்போது, இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், சமீப காலமாக இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளால், அன்னிய செலாவணி வருவாய் கிடைப்பதுடன், சுற்றுலாத் தளங்களை சேர்ந்த உள்ளூர் மக்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பும் உருவாக்கப்படுகிறது.

வளர்ச்சி:சென்ற செப்டம்பர் மாதத்தில், இந்தியா வந்த சுற்றுலாப் பயணிகளால், 6,652 கோடி ரூபாய் அன்னிய செலாவணி வருவாய் கிடைத்தது. இது, முந்தைய ஆண்டின், இதே மாதத்தை (5,748 கோடி ரூபாய்) விட, 15.7 சதவீதம் அதிகமாகும்.நடப்பாண்டின், செப்டம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், சுற்றுலா வாயிலாக கிடைத்த அன்னிய செலாவணி வருவாய், முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட, 22.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 66,061 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)