சமையல் எரிவாயு விலை ரூ.11.42 உயர்வுசமையல் எரிவாயு விலை ரூ.11.42 உயர்வு ... நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.4,620 கோடி உயர்வு நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.4,620 கோடி உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹோண்டா, மாருதி, ஜெனரல் மோட்டார்ஸ் கார்கள் விலை உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2012
16:45

பண்டிகை காலம் நெருங்கி வந்தாலும், உற்பத்தி செலவு அதிகரிப்பு, டீஸல் விலை உயர்வால், சரக்கு கட்டணம் அதிகரிப்பு, உள்ளிட்ட பல காரணங்களை முன் வைத்து, ஹோண்டா, மாருதி சுசூகி மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் கார் நிறுவனங்கள், தங்களின் கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன. ஹோண்டா நிறுவனம், பிரியோ, ஜாஸ் மற்றும் சிட்டி மாடல் கார்களின் விலையை, அக்டோபர் 1ம் தேதி முதல் உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த கார்களின் விலையில், 2.6 சதவீதம் வரை, உயர்வு இருக்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது டில்லியில், பிரியோ காரின் விலை ரூ.4.05 லட்சத்தில் இருந்து ரூ.5.23 லட்சம் வரையும், ஜாஸ் காரின் விலை ரூ.5.85 லட்சத்தில் இருந்து, ரூ.6.41லட்சம் வரையும், சிட்டி காரின் விலை ரூ.7.25 லட்சத்தில் இருந்து, ரூ.10.46லட்சம் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் இந்த கார்களின் விலையை, டீலர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
மாருதி சுசூகி நிறுவனம், இந்தியாவில் மாருதி 800 கார் முதல், கிஸாஷி கார் வரை, பல மாடல்களில், கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், மாருதி 800 காரின் விலை ரூ.2.4 லட்சம் என்ற அளவிலும், கிஸாஷி காரின் விலை ர.17.5 லட்சம் என்ற அளவிலும் டில்லியில் காணப்படுகிறது. தமிழகத்தில் இதன் விலை மாறுபடும். இன்னும் ஒரு வாரத்தில், கார்களின் விலையை உயர்த்தப்போவதாக, மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்பார்க் கார் முதல் கேப்டிவா கார் வரை, பல மாடல்களில் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், ஸபார்க் காரின் விலை, டில்லியில் ரூ.2.85 லட்சம் என்ற அளவிலும், கேப்டிவா காரின் விலை ரூ.24.6 லட்சம் என்ற அளவிலும் உள்ளன. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும், கார்களின் விலை, அக்டோபர், 1ம் தேதி முதல் உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)