பதிவு செய்த நாள்
06 அக்2012
16:45
பண்டிகை காலம் நெருங்கி வந்தாலும், உற்பத்தி செலவு அதிகரிப்பு, டீஸல் விலை உயர்வால், சரக்கு கட்டணம் அதிகரிப்பு, உள்ளிட்ட பல காரணங்களை முன் வைத்து, ஹோண்டா, மாருதி சுசூகி மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் கார் நிறுவனங்கள், தங்களின் கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன. ஹோண்டா நிறுவனம், பிரியோ, ஜாஸ் மற்றும் சிட்டி மாடல் கார்களின் விலையை, அக்டோபர் 1ம் தேதி முதல் உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த கார்களின் விலையில், 2.6 சதவீதம் வரை, உயர்வு இருக்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது டில்லியில், பிரியோ காரின் விலை ரூ.4.05 லட்சத்தில் இருந்து ரூ.5.23 லட்சம் வரையும், ஜாஸ் காரின் விலை ரூ.5.85 லட்சத்தில் இருந்து, ரூ.6.41லட்சம் வரையும், சிட்டி காரின் விலை ரூ.7.25 லட்சத்தில் இருந்து, ரூ.10.46லட்சம் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் இந்த கார்களின் விலையை, டீலர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
மாருதி சுசூகி நிறுவனம், இந்தியாவில் மாருதி 800 கார் முதல், கிஸாஷி கார் வரை, பல மாடல்களில், கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், மாருதி 800 காரின் விலை ரூ.2.4 லட்சம் என்ற அளவிலும், கிஸாஷி காரின் விலை ர.17.5 லட்சம் என்ற அளவிலும் டில்லியில் காணப்படுகிறது. தமிழகத்தில் இதன் விலை மாறுபடும். இன்னும் ஒரு வாரத்தில், கார்களின் விலையை உயர்த்தப்போவதாக, மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்பார்க் கார் முதல் கேப்டிவா கார் வரை, பல மாடல்களில் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், ஸபார்க் காரின் விலை, டில்லியில் ரூ.2.85 லட்சம் என்ற அளவிலும், கேப்டிவா காரின் விலை ரூ.24.6 லட்சம் என்ற அளவிலும் உள்ளன. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும், கார்களின் விலை, அக்டோபர், 1ம் தேதி முதல் உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|